தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த ஆட்சியர்!

தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த ஆட்சியர்!

கு.அசோக்,

 காட்பாடியில் 441   பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி ஆய்வு செய்தார் - தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு தீ தடுப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.

 வேலூர்மாவட்டம்,காட்பாடியில் தனியார் பள்ளி பேருந்துகள் வருடாந்திர கூட்டாய்வு நடைபெற்றது.

 இதில் வேலூர் மாவட்டம் முழுவதுமுள்ள 441 தனியார் பள்ளி பேருந்துகளும் ஓட்டுநர்களும் பங்கேற்றனர்.

 இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 இதில் பேருந்துகள் முறையாக இயங்குகிறதா? அவசர கால ஜன்னல்களும் வழிகளும் பேருந்துகளில் முறைப்படி உள்ளதா? தீ தடுப்பு சாதனங்கள் பேருந்தில் காலாவதியாகாமல் உள்ளனவா? மேலும் முதலுதவி பெட்டிகளும் பராமரிக்கபடுகிறதா ஆகியவைகள் குறித்து ஆய்வு செய்தார்.

 வட்டார போக்குவரத்துறை வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல்துறையும் இணைந்து இந்த ஆய்வினை செய்தனர்.

 ஆய்வின் போது வேலூர் வருவாய் கோட்டாட்ச்சியர் கவிதா மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 ஓட்டுநர்களும் தீ தடுப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது கண் பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டது