லாரி சரக்குகளை கடத்த முயன்றவர்கள் கைது!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெரியங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னைக்கு கடத்த முயன்ற இரண்டு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் 4 பேர் கைது செய்து கிராமிய காவல்துறை போலீசார் நடவடிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரிய குப்பம் பேருந்து நிலையத்தில் ஆம்பூர் கிராமிய காவல்துறை ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் நவீன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் சந்தேகத்திற்குரிய வகையில் ஈச்சர் வாகனம் ஒன்றை சோதனை செய்தபோது சமையல் எண்ணெய் 490 லிட்டர். எல்இடி பல்புகளும் 4 பண்டல் டிஷ்யூ பேப்பர் , மூன்று ரோல்கள் ராணுவ உடை ஆகியவை இருந்தது. இதுகுறித்து லாரியில் வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனை அடுத்து போலீசார் அவர்களை ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்ததில் அவர்கள் சென்னையை வளசரவாக்கத்தை சேர்ந்த டேவிட் சோபி (55), வியாசர்பாடி சேர்ந்த பரமசிவம் (36), வால்மீகி நகரைச் சேர்ந்த அருண் (36) ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்த முத்து (45) என தெரிய வந்தது. மேலும் இவர்கள் இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் லாரிகளில் இருந்து பொருட்களை திருடுவதும் தெரிய வந்தது.
இதனை அடுத்து போலீசார் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.