பெண் போலிசை "சாரி" கேட்க வைத்த லாரி ஓட்டுநர்!

பெண் போலிசை "சாரி" கேட்க வைத்த லாரி ஓட்டுநர்!

ஜி.சாந்தகுமார்,

  லாரி டிரைவரை பெண் போலீஸ் தாக்கிய நிலையில், அந்தம்மாவிடம் லாரி ஓட்டு கேள்விமேல் கேள்வி கேட்டு கூட்டத்தை கூட்டிவிட்டார். செய்வதறியாத அந்த போலிஸ்காரம்மா டிரைவிரிடம் சாரி கேட்டு பிரச்சனைக்கு முற்றுபுள்ளிவைத்திருக்கிறார்.

  சென்னை எண்ணூரில் உள்ள துறைமுகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் கன்டெய்னர் லாரி ஓட்டுநர்களிடம் இருந்து அந்தப் பகுதிகளில் உள்ள போக்குவரத்து போலீஸார் லஞ்சம் வாங்குவதாக மாமுலாக உள்ளது. அப்படியிருக்க கடந்த இரண்டு வாரங்களாகவே துறைமுகத்துக்கு சரக்கு ஏற்றி செல்லும் கன்டெய்னர் லாரிகளை ஆவடி சரகத்துக்கு உட்பட்ட மணலி, சாத்தாங்காடு, எர்ணாவூர் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீஸார் தடுத்து நிற்க வைத்துள்ளனர்.

  அப்படியிருக்க புதன்கிழமை முதல் சனிக்கிழமை நள்ளிரவு வரை அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  லாரி நிற்காமல் செல்லவேண்டுமானால் அங்கு பணியில் உள்ள சில போலீஸாருக்கு லஞ்சம்  தர வேண்டுமாம்.

   அந்த வகையில் நேற்று நேற்று இப்படி வரிசையில் நிற்காத லாரி ஓட்டுநர், நேராக துறைமுகத்தை நோக்கி வண்டியை ஓட்டியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த எர்ணாவூர் சந்திப்பில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், அந்த லாரியை மடக்கிஅந்த லாரி ஓட்டுநரின் அறைந்ததாராம்.  

  பலர் முன்னிலையில் வைத்து பெண் காவலர் அடித்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான அந்த லாரி ஓட்டுநர், அந்தப் பெண் காவலரை முற்றுகையிட்டு எப்படி நீங்க என்னை அடிக்கலாம்? அடிக்கிறது ரைட்ஸ் கொடுத்தது யார்? என சரமாரியாக கேள்வியெழுப்பினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

   இதுகுறித்து தகவலறிந்த லாரி உரிமையாளர் சங்கத்தினர் அங்கு உடனடியாக வந்து அந்தப் பெண் காவலரை ரவுண்டு கட்டி செல்போனில் வீடியோ எடுத்தபடி, "எதுக்கு மேடம் அவரை அடிச்சீங்க?" "எப்படி நீங்கள் அடிக்கலாம்?" எனக் கேள்விகேட்டதால் பெண் காவலர் திணறிப் போனார்.

  முதலில்,டிரைவரை அவரை அடிக்கவில்லை என்று கூறிய பெண் காவலர், ஒருகட்டத்தில், "இப்படியே நீங்க பேசுனீங்கனா, எனக்கு லஞ்சம் தர முயற்சி செஞ்சீங்கனு புகார் கொடுப்பேன்" என மிரட்டினார். அதற்கெல்லாம் அசராத லாரி ஓட்டுநரும், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும், "நீங்க கம்ப்ளெய்ன் கொடுங்க மேடம். நாங்க பாத்துக்குறோம்" என்று அவர்கள்நிலைபாட்டில் உறுதியாக இருந்தனர்.

  இதை கவனித்துக் கொண்டிருந்த உதவி ஆய்வாளர் அவர்களிடம் சமாதானம் பேசினார். டிரைவரை அடித்ததற்காக பெண் காவலர் மன்னிப்பு கேட்டால் தான் தாங்கள் செல்வோம் எனக் கூறியதை அடுத்து, வேறு வழியின்றி, "சாரி சார் போதுமா.." என அந்தப் பெண் காவலர் கூற, லாரி ஓட்டுநரும், சங்கத்தைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்து சென்றனர்.