மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்பாட்டம்!

மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்பாட்டம்!

 கு.அசோக்,

வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க சார்பில் மாவட்டத் தலைவர் லால்பகதூர் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.

 இதனை மாவட்ட போராட்ட குழு தலைவர் ரவி துவங்கி வைத்தார்.¢ ரேஷன் கடை பணியாளர்களை பல்வேறு பிரச்சணைகளை கண்டறிய குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் ஊதிய உயர்வை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.

  சங்கங்களில் உள்ள காலிபணியிடங்களை விரைந்து நிரப்பிடவும், பொதுப்பணி நிலைதிறனில் உள்ள குளறுபடிகளை நீக்கவும், தவணை தவறிய நகைகளை ஏலம் விட்ட வகையில் ஏற்படும் இழப்பை நஷ்ட கணக்கிற்கு எடுத்து செல்ல உத்தரவிட வேண்டும் என்பதை உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடந்தது இதில் திரளான பணியாளர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.