நறுவீ மருத்துவமனை அருகிலிருந்து தமிழ்நாடு துவக்க நாள் ஊர்வலம்! திருப்பத்தூரில் நடைபெற்றது

ஜி.கே.சேகரன்,
வேலூர்மாவட்டம், வேலூரில் உள்ள நறுவீ மருத்துவமனை அருகிலிருந்து செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு துவக்க நாளை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமானது நடைபெற்றது. இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் துவங்கிவைத்தார்.
தமிழ் மொழிப்பற்று தமிழ்நாட்டு பற்று ஆகியவைகளை வளர்க்க வேண்டுமென பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி மாணவர்கள் தமிழ் வளர்ப்போம் என கூறி முழக்கங்களை எழுப்பி ஊர்வலமாக சென்ற நிலையில் இந்த ஊர்வலமானது வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கர்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு துவக்க நாள் குறித்த புகைப்பட கண்காட்சியையும் ஆட்சியர் துவங்கி வைத்தார் மாணவர்களும் ஆர்வமுடன் கண்காட்சியை பார்வையிட்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட்டம்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார் இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட பழைய ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் இன்று மெட்ராஸ் மாகாணத்திற்கு "தமிழ்நாடு" என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள் நினைவு கூறும் வகையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கையில் பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து கலந்துக்கொன்டனர்.
இந்த பேரணியில் தமிழ் வாழ்க, தமிழுக்கு அமுது என்று பெயர் என்று கோசங்களோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பேரணி முடிந்தது.