பிரபல காஜா பிரியாணி ஓட்டலில் தீ! அதிகாரிகள் மெத்தனம்!!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள பிரபல காஜா ஓட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அந்தக்கடையில் உள்ள
புகை போக்கியில் ஏற்பட்ட திடீர் தீயால் புகைமூட்டம் ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் சாதுரியமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையத்தின் மைய பகுதியில் காஜா என்கிற பெயரில் பிரபல பிரியாணி கடை இயங்கி வருகிறது. மதியம் உணவக ஊழியர்கள் உணவு தயார் செய்து கொண்டிருந்தபோது மேலே உள்ள புகை கூண்டு திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உணவக நிர்வாகம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த வாணியம்பாடி இணைப்பு துறையினர் சாதுரியமாக செயல்பட்டு புகை ஏற்பட்ட தீயை அனைத்து கொண்டு வந்தனர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் உணவு தயார் செய்யும் இடத்தில்.இருந்து வரும் புகையுடன் தீ வேகமாக பரவி புகைகூண்டில் தேங்கி ஒட்டியுள்ள டஸ்ட் இல் (புகை துகள்கள்) தீ பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து நகரப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பு:- வாணியம்பாடியில் உள்ள இதைப்பொன்ற பல உணவகங்களில் பாதுகாப்பற்ற சமையல் கூடங்களே உள்ளன. அரசின் உணவு பாதுகாப்புனம்சங்கள் எவற்றையும் இவர்கள் பின்பற்றுவதில்லை.
அதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நன்கு கவனிக்கப்படுகிறார்களாம்.