அதிகாரிகள் மக்கள் பணியை சரியாக செய்வது கிடையாது! தொடர்ந்தால்....கலெக்டர் எச்சரிக்கை!

அதிகாரிகள் மக்கள் பணியை சரியாக செய்வது கிடையாது! தொடர்ந்தால்....கலெக்டர் எச்சரிக்கை!

 கு.அசோக்,

  தெள்ளை கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் மவாட்ட ஆட்சியர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார் - கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் சரியில்லை என புகார் கூறியும் கிராமப்புறத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை ஒழுங்காக பணியாற்றுங்கள் இல்லை என்றால் நடவடிக்கை எடுப்படும் என பேசினா£.¢

வேலூர்மாவட்டம், அமிர்தி அருகேயுள்ள தெள்ளை கிராமத்தில் இன்று மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடந்த இந்த முகாமில், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் மற்றும் கணியம்பாடி ஒன்றிய துணை தலைவர் கஜேந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

  முகாமில் கர்பினிகளுக்கு பெட்டகங்கள் மற்றும் சித்த மருத்துவம் சார்பில் சஞ்சீவி பெட்டகம் ஆகியவைகள் தையல் எந்திரம், இஸ்திரி பெட்டி ஆகியவைகளும் வழங்கப்பட்டது

  அப்போது மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மக்களின் குறைகளை தீர்க்கவே இது போன்ற மனு நீதி நாள் முகாம்கள் நடக்கிறது என பேசிய போது மகளிர்கள் எழுந்து குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியில்லை புகார் கூறியும் அதிகாரிகள் சரி செய்யவதில்லை என ஆட்சியரிடம் முறையிட்டார்கள்.

  இதனால் கோபமடைந்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கிராமப்புறங்களில் மக்களுக்கு நன்மை செய்யவே திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. அவற்றை மக்களிடம் அதிகாரிகள் தான் கொண்டு சேர்க்க வேண்டும்.  அந்த பணியை அதிகாரிகள் சரியாக செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் சரியாக வேலை செய்வது கிடையாது. இனியும் இது போன்று புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கபடும் என பேசினார்.