மனைவியின் பக்தியே டி.கே.சிவக்குரின் உயிரை காப்பாற்றியது! ஜோசியர் சொன்ன பரிகாரம்,!

மனைவியின் பக்தியே டி.கே.சிவக்குரின் உயிரை காப்பாற்றியது! ஜோசியர் சொன்ன பரிகாரம்,!

ஆர்.செல்வராஜ்,

 மனைவியின் பக்தியே டி.கே.சிவக்குரின் உயிரை காப்பாற்றியது என ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பிது  பற்றி ஜோதிடர் ஒருவர் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.       

 கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் பிரமுகரான டி.கே.சிவக்குமார் நேற்று முன்தினம் ஹெலிகாப்டரில் பெங்களூருவில் இருந்து கோலார் மாவட்டம் முல்பாகல் சென்ற போது கழுகு ஹெலிகாப்டரின் கண்ணாடி மீது மோதியது.

  அதில் ஹெலிகேப்டரின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இந்த விபத்தில் டி.கே.சிவக்குமார், பைலட் உள்பட அனைவரும் உயிர் தப்பினர்.

   கடவுள் மீது நம்பிக்கை கொண்ட டி.கே.சிவக்குமார் நேற்று துமகூரு மாவட்டம் துருவக்கெரே சென்று அஜ்ஜய்யா மடத்தில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

 மேலும், விபத்தில் இருந்து தப்பிய டி.கே.சிவக்குமாருக்கு பிரபல ஜோதிடர் துவாரகநாத் சில பரிகாரங்களை கூறியிருக்கிறார்.

 அதே போல் டி.கே.சிவக்குமாருக்கு தற்போது குருபாலா அல்லது சனி பாலா இல்லையாம். இருந்த போதும், அவரது மனைவி உஷாவின் கிரக நிலை நன்றாக இருப்பதால் அந்த தெய்வீக சக்திமவடி.கே.சிவக்குமாரை காப்பாற்றி உள்ளதாம்.

  ஏன்னா, ஹெலிகாப்டர் மீது மோதிய கழுகு உயிரிழந்துள்ளது. சாஸ்திரப்படி பெங்களூரு அல்சூரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமேஸ்வர் கோவிலில் ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் குக்கே சுப்பிரமணிய கோவிலுக்கு 22 நாட்களுக்கு சென்று சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்று பஞ்ச பக்ஷி சாஸ்திரநிபுணர் கஜேந்திரன் கூறியுள்ளார்.    அதனையேற்று டி.கே.சிவக்குமார் பரிகார பூஜை செய்ய உள்ளார்.

   எலெக்ஷன் நேரத்தில் இது பற்றின பேச்சு சற்று தூக்கலாகவே உள்ளது.