கணக்கு டீச்சரின் செக்ஸ் வலையில் விழுந்த பத்தாம் வகுப்பு மாணவன்!

கணக்கு டீச்சரின் செக்ஸ் வலையில் விழுந்த பத்தாம் வகுப்பு மாணவன்!

பால.ஜோதி,

 கணக்கு டீச்சரின் ஆசை வலையில் விழுந்த பத்தாம் வகுப்பு மாணவனை அவர் படாதபாடு படுத்தியிருக்கிறார்.

 திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி(வயது 40).  துறையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை பார்த்து வரும் அவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக அவரும், அவரது கணவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் அவரிடம் டியூசன் படித்த 10-ம் வகுப்பு மாணவனை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்திருக்கிறார்.

 தனக்கு உல்லாசம் தேவைபடும் போதெல்லாம் மாணவனை அழைத்து தனிமையில் இருந்துள்ளனர். இப்படி இரவு பகல் பாராமல் மாணவனுக்கு டீச்சர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.

 மாணவனின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பெற்றோர், தனது மகனின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

   அப்போது இரவு நேரங்களில் அந்த மாணவர், ஆசிரியை தேவியுடன் அதிக நேரம் பேசி வருவதும், படிப்பில் கவனமில்லாததும், அந்த மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

 எனவே பெற்றோர் போலிசில் புகார் அளித்தனர்.

  அந்த புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியை தேவியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ததுடன் மாணவர் குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.