குவளைத் தண்ணீரில் மூழ்கி இரண்டு வயது குழந்தை பலி!

குவளைத் தண்ணீரில் மூழ்கி இரண்டு வயது குழந்தை பலி!

க.பாலகுரு,

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, தென்குவள வேலி பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் துபாய் நாட்டில்  வேலை பார்த்து வருகிறார். இவருடைய இரண்டு வயது மகன் துருவன், இவருடைய மூத்த மகன் நித்திஷ் ஒன்பது வயது மற்றும் அவருடைய மனைவி கீதா மூவரும் மேற்படி வீட்டில் வசிக்கிறார்கள்.

 இந்நிலையில் மனைவி கீதா  மாடியில் துணி காய வைக்க சென்ற பொழுது, கீழே இருந்த சிறுவன் துருவன் அருகில் இருந்த குவளை தண்ணீரில் தவறி விழுந்து உள்ளான். குவளை தண்ணீரில் விழுந்த சிறுவன் அதிலிருந்து வெளியில் வர முடியாமல் அதில் மூழ்கி உயிருக்கு போராடி மயங்கியுள்ளான்.

 பிறகு அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் துருவன் அம்மா கீதா ஆகிய உடனடியாக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு துருவனை அழைத்து சென்றுள்ளார்கள்

  ஆனால் அங்கு துருவன் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.இந்த துயர  சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.