சம்பளம் கொடு இல்லைன்னா? ஜாக்டோ ஜியோ மிரட்டல்!

சம்பளம் கொடு இல்லைன்னா? ஜாக்டோ ஜியோ மிரட்டல்!

ஜி.கே.சேகரன்,

தமிழகம் முழுவதும் கல்வித்துறையில் நிர்வாக சீரமைப்பு நடைமுறையால் இரண்டு மாதகாலமாக சம்பளம் வராமல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் அரசு ஊழியர்கள் பாதிப்பு அரசு உடனடியாக தலையிட்டு சம்பளம் வழங்க கோரிக்கை மாநில தலைவர்  பேட்டி

 வேலூர்மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சேகர் மற்றும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 அதன் பின்னர் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடத்தப்பட்டது.

  அதில் தமிழக முதல்வர் கலந்துகொண்டு 101 அரசாணையை ரத்து செய்துவிட்டு 151 அரசாணையாக மாற்றி, இந்த அரசாணை அனைத்துத்துறை செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

 ஆனால் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரின் அலட்சியபோக்கால் நிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் கடந்த 2 மாதங்களாக கல்வித்துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு ஊதியம் வழங்கபடவில்லை.

   இதனால் கல்வித்துறையில் பணியாற்றுபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 குறிப்பாக அவர்கள் பெற்ற கடனை கட்ட முடியவில்லை, வட்டி தவணையும் செலுத்த முடியவில்லை.  ஆகவே தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு நிர்வாக சீரமைப்பால் பாதிக்கப்பட்டுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு சம்பளம் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் போராட்டத்தில் ஈடுபடுவுள்ளதாக கூறினார்.