தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி! வேலூர் இப்ராகிம் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஜி.கே.சேகரன்,
பேரணாம்பட்டு நகரத்திற்கு வந்த பாஜக தேசிய சிறுபான்மையினர் அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் தடுத்து நிறுத்தம்- நூற்றுக்கு மேற்பட்ட போலீசருக் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது! தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆட்சி நடத்தி வருவதாக வேலூர் இப்ராகிம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டத்துக்கு பா.ஜ.க.வின் சிறுபாண்மை பிரிவின் செயலாளர் வேலூர் இப்ராகிம் வந்தார்.
மத்திய அரசின் சாதனைகளையும் சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு மோடி செய்த சாதனைகளை பொதுமக்களுக்கும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இதனிடையே வேலூர் இப்ராஹிம் பேரணாம்பட்டு வருவதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் அவர் பேரணாம்பட்டு நகர எல்லையில் போலீஸ்சாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
மேலும் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பேரணாம்பட்டு நகரத்திற்கு செல்லாமல் அருகில் இருந்த ஏரிகுத்தி கிராமத்திற்கு சென்று அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு விட்டு திரும்பி சென்றார்
இந்நிலையில் இப்ராகிம் செய்தியாளிடம் பேசிய போது, தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆட்சி நடைபெற்று வருவதாகவும், தொடர்ந்து பாரதப் பிரதமருக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும் சொன்னார்.
மேலும் கடந்த பட்ஜெட்டில் இஸ்லாமியர்களுக்காக 3093 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாகவும் தென்னிந்தியாவில் தமிழகத்திற்கு அதிக அளவில் இது ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து சிறுபான்மை மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளவே தான் வந்ததாகவும்கூறினார்.
இது எந்த வகையிலும் தீவிரவாதமோ, வன்முறையோ அல்ல என்றும் தங்கள் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதை சந்திப்பதற்கு தயாராக உள்ளதாகவும் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.
வேலூர் இப்ராஹிம் வருகையோட்டி பேரணாம்பட்டு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டது. ஆகவே அந்தப் பகுதியில் பரப்பரப்பான சூழல் காணப்பட்டது. இந்நிலையில் பேரணாம்பட்டு பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சேர்ந்த கட்சியினர் வேலூர் இப்ராஹிம் வருவதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.