முதலமைச்சர் வேந்தராக இருந்தால்தான் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும்!உணர்த்தியவர் ஜெயலலிதா என்றார் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் வேந்தராக இருந்தால்தான் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும்!உணர்த்தியவர் ஜெயலலிதா என்றார் மு.க.ஸ்டாலின்!

உ.சசிகுமார்,

பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருந்தால்தான் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்று முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.

   ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது;

   இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் இது. தமிழ்நாட்டில் முதல்-அமைச்சரே வேந்தராக இருக்கும் பல்கலைக்கழகம் இதுதான், ஜெயலலிதா வேந்தராக தன்னையே நியமித்துக்

கொண்டதை நான் மனதார பாராட்டுகிறேன். முதல்-அமைச்சர் வேந்தராக இருந்தால்தான் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்று முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா.

  முதல்-அமைச்சர் பலகலைக்கழக வேந்தராக இருப்பதால் மக்கள் நினைப்பதை செய்ய முடிகிறது. பல்கலைக்கழகங்களுக்கு முதல்- அமைச்சர் வேந்தராக இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் இதுதான். பல்கலைக்கழக வேந்தர் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.

   நமது சட்ட போராட்டத்துக்கு நல்ல முடிவு வரும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பின்னணிப் பாடகி பி சுசிலா அவர்களுக்கு முதலமைச்சர் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.