காவல் அலுவலகத்தில் தவறாக நடந்துக்கொண்ட இளம் போலிஸ் ஜோடி!

காவல் அலுவலகத்தில் தவறாக நடந்துக்கொண்ட இளம் போலிஸ் ஜோடி!

க.பாலகுரு,

  மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் ஒழுங்கினமாக நடந்து கொண்ட ஆண் பெண் காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல்  கண்காணிப்பாளர் மீனா உத்தரவு:-

மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மயிலாடுதுறை காவேரி  நகரையடுத்த ஆரோக்கியநாதபுரம் பகுதியில் இயங்கிவருகிறது.

 இங்கு      மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையின் கீழ் ஏடிஎஸ்பி., டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் போலீசார்  என 100க்கும்மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல்நிலயங்களின் தலைமை அலுவலகம். பொதுமக்கள் குறை தீர்த்துவைக்கும் இடமாகவும் திகழ்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் நள்ளிரவு நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஓரு ஏசி அறையில்  ஆண் பெண் காவலர்கள் இரண்டு பேர் உல்லாசமாக இருந்தாக கூறப்படுகிறது.

  இத்தகவல் அறிந்து விசாரணை செய்யப்பட்டதில் ஆண் காவலர் பெயர் வினித் என்பதும், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் உள்ளவர் என்றும், சிக்கிய பெண் காவலர் பெயர் கவிதா என்பதும், குத்தாலம் காவல்நிலையத்தில் பணியில் உள்ளவர் என்றும் தெரியவந்தது.

   இருவரும் திருமணம் ஆகாதவர்கள்,  இதுகுறித்து  மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ஏடிஎஸ்பி வேணுகோபால்அறிக்கை அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உடனடியாக விசாரணை செய்து பணியின் போது ஒழுங்கீனமாகவும்  தவறாக நடந்து கொண்ட இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இச் சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.