அக்கா அக்கா மாஸ்க்கை கழுற்றுங்கள்! ராஜிவ் கொலையாளி நளினி பரேலில் கூக்குரல்!

அக்கா அக்கா மாஸ்க்கை கழுற்றுங்கள்! ராஜிவ் கொலையாளி நளினி பரேலில் கூக்குரல்!

  ஜி.கே.சேகரன்!

  வேலூர்மாவட்டம்முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் நளினியின் தாயார் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

  அதில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தனக்கு  உடல்நிலை சரி இல்லை. அதனால் தமிழக அரசிடம் தனது மகளுக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தேன்.

  இந்த கோரிக்கை மீது எந்த பதிலும் அளிக்காமல் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. அதனால் தனது  மகளுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு கேட்டு கொள்கிறேன் " என அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.

  இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தபோதுஅரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி "தமிழக அரசு நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முடிவு செய்துருப்பதாக தெரிவித்தார்.

  இதனைத் தொடர்ந்து நளினிக்கு பரோல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.

 இந்த நிலையில் நளினிக்கு இன்று 27 ஆம் தேதி முதல் 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிடப்பட்டது.

  அதனடிப்படையில் வேலூர் பெண்கள் சிறையில் இருந்து பரோலில் நளினி வெளியே வந்தா£

  அவர் சிறையிலிருந்து ¢வெளியே வந்த போது புகைப்படம் எடுக்க பலர் ஆர்வம் காட்டினர். அப்போது ஒருவர் அக்கா அக்கா மாஸ்க்கை கழற்றுங்க, இந்த பக்கம் பாருங்க என்றி கூக்குரலிட்டனர்.

  மேலும் பரோலில் வந்தது உங்களுக்கு மகிழ்ச்சியா என்று ஒருவர் அப்பாவியாய் கேட்டார்.(பேட்டியளிக்கக்கூடாது என்பது பரோல் நிபந்தனைகளில் ஒன்றாகும் அல்லவா)

  ஆக நளினி காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார்.

  ஏற்கனவே அவரது மகள் அரித்ராவுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி பரோல் பெற்று சத்துவாச்சாரியில் தங்கியிருந்தார். ஆனால் சொன்னபடி திருமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.