ஊடகவியலாளர்கள் சமுதாயத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை போக்கிட உதவுவார்கள்! கலெக்டர் நம்பிக்கை!

கு.அசோக்,
அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பணி ஊடகத்துறைக்கு பொறுப்புள்ளது - கூடுதல் தலைமை இயக்குநர் பத்திரிகை தகவல் அலுவலகம் அண்ணாதுரை பேச்சு - அரசு மக்கள் நலனுக்காக பல் வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது அதனை மக்களிடம் கொண்டு செல்லும் பங்கு ஊடகவியலாளர்களை சாரும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு.
வேலூர்மாவட்டம்,வேலூரில் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் சார்பில் ஊரக ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கு நடைபெற்றது.
பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை அவர்கள் தலைமை தாங்கி பேசினா£.
¢ வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி இப்பயிலரங்கை துவங்கி வைத்தார்.
இதில் தேசிய சுகாதார திட்ட மேலாளர் டாக்டர் ராகேஷ் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சில ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.
இக்கருத்தரங்கில் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை பேசுகையில் மத்திய அரசு மக்களின் நனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அந்த திட்டங்கள் பயன்கள் கிராமங்களுக்கு தெரிய வேண்டும் என்ற நோக்கில் பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்க இப்பயிலரங்கம் நடக்கிறது.
இதன் மூலம் மக்கள் திட்டங்களை ஊடகவியலாளர்கள் மூலம் கொண்டு செல்ல ஏதுவாக அமையும் என்று பேசினா£.¢
பின்னர் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் இக்கருத்தரங்கில் பேசுகையில் தமிழக அரசின் திருமண உதவி திட்டம், திருநங்கைகளுக்கான திட்டம், கல்வி வளர்ச்சிக்காக தீட்டபடும் திட்டம், மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைலேப்டாப், சைக்கிள் வழங்குதல், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா என பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இதனை மக்களிடம் கொண்டு சென்று ஊடகவியலாளர்கள் சமுதாயத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை போக்கிட இவர்களின் உதவி பெரும் உதவியாக உள்ளதாக பேசினார் இதில் களவிளம்பரத்துறை உதவி அலுவலர் ஜெயகனேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்.