ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.மிஸ்ஸிங்! என்ன காரணம்? பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.மிஸ்ஸிங்! என்ன காரணம்? பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

ம.பா.கெஜராஜ்,

 இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்தினார்.

  ஆனால் ஆண்டு தோறும் இங்கு நேரில் மரியாதை செய்து வந்த அ.தி.மு.க.தலைமை நிர்வாகிகள் மிஸ் ஆனார்கள். அது குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

  முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது குருபூஜை விழா 28-ந்தேதி தொடங்கி, முதல் நாள் ஆன்மீக விழாவாகவும், 2-ம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாவது நாளான 30 ஆம் தேதி குருபூஜை விழாவாகவும் நடத்தப்பட்டது.

 இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

 இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவர் குருபூஜை விழாவில் இன்று காலை கலந்துக்கொண்டார்.

  முன்னதாக மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.

 பின்னர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து, குருபூஜை விழாவில் பங்கேற்றார்

  அப்போது அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அனிதா ராதாகிருஷ்ணன், சக்கரபாணி, கீதாஜீவன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத், ஆகியோர் வந்திருந்தனர்.

 இந்நிலையில் அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைகளில் முன்னாள் அமைச்சர்கள் அ.தி.மு.கவின் சார்பில் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, நத்தம் விசுவநாதன், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

  அவர்களைப்போல முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார். அவரிடரிம் செய்தியாளர்கள் பேட்டிகண்டனர். அப்போது நேற்று அ.தி.மு.க. கொடி மற்றும் தொண்டர்களுடன் வி.கே சசிகலா தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது குறித்து கேள்வியெழுப்பினர். "அ.தி.மு.க. கொடியை யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம். எல்லாரும் இணைந்து செயல்படுவதையே தொண்டர்கள் விரும்புகின்றனர்" என்று அழுத்தி செல்லிவிட்டு புறப்பட்டார்.  

 இந்நிலையில், குருபூஜை விழாவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை     ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை.

 ஆனால் வி.கே. சசிகலா மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தியதோடு, பசும்பொன்னிற்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்.பசும்பொன்னுக்கு வரதாதற்கு இட ஒதுக்கீடே என்று கூறப்படுகிறது.

 அதாவது  அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மிக பிற்படுத்தப்பட்ட பிரிவில், வன்னியர்களுக்கென தனியாக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்தது,  முக்குலத்தோரை பெரும் வெறுப்பேற்றியது. ஆகவே தான் எடப்பாடி கே. பழனிசாமி பசும்பொன்னிற்கு வரவில்லையென பேச்சுகள் பரவின.

  ஆனால் எடப்பாடி கே. பழனிசாமிக்கு உடல்நலம் சரியில்லை. ஏற்கனவே குடலிறக்க நோய்க்காக அறுவை சிகிச்சை செய்தவர். அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டியிருக்கிறது. எந்த நேரம் வேண்டுமானாலும் கூடுதல் சிகிச்சை அவருக்குத் தேவைப்படலாம் என்பதால் வரவில்லையாம்.

  ஓ.பி.எஸ்ஸை பொறுத்தவரை அவரது மனைவி மறைந்து இன்று அறுபதாவது நாள் என்பதால்,சில சடங்குகள் உள்ளதாம். ஆகவே அவர் வரவில்லையாம்.

 ஆனால் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். அதே போல் ஓ. பன்னீர்செல்வம் தேனியில் உள்ள தேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

   குருபூஜை நிகழ்ச்சிக்கு காவல்துறை ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மற்றும் தென்மண்டல ஐ.ஜி. அன்பு தலைமையில் தமிழகமெங்குமிருந்து உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் .