சமாதியில் சண்டை போட்ட இலங்கை மன்னன் குடும்பம்!

ஜி.கே.சேகரன்,
இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்ரம ராஜசிங்கே நினைவு தினம் வேலூரில் கடைபிடிக்கப்பட்டது. அதில் ராஜாவின் வாரிசுகள் இருபிரிவாக அஞ்சலி செலுத்தினர். மேலும் பொதுமக்களும் தமிழார்வலர்களும் அஞ்சலி செலுத்தியதோடு, அடுத்த ஆண்டு முதல் இதனை தமிழக அரசு அரசு விழாவாக நடத்தி மோதல்கள் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.
வேலூர்மாவட்டம்,வேலூர் பாலாற்றங்கரையில் இலங்கையை ஆண்ட கடைசி தமிழ்மன்னன் விக்கிரமராஜசிங்கே குடும்பத்தினரின் கல்லறை உள்ளது.
இத்னை தமிழக அரசு முத்து மண்டபமாக கட்டி பராமரித்து வருகிறது. விக்கிரம ராஜசிங்கேவின் நினைவு தினமான நேற்று முத்து மண்டபத்தில் ராஜாவின் வாரிசுகள் மதுரையை சேர்ந்த அசோக் ராஜா ஒரு பிரிவாகவும் ஆந்திராவை சேர்ந்த பிருத்திவராஜன் மகன் ஒரு பிரிவாகவும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அப்போது இரு தரப்புக்கும் வாய்தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களை வெளியேற்றினார்கள். இத்தனை ஆண்டுகளாக ஒற்றுமையாக ராஜாவின் நினைவு நாள் அனுசரித்த குடும்பம் இப்போது பிளவுபட்டது.
மேலும் பொதுமக்கள் தமிழார்வலர்கள் பல்வேறு சமுதாய அமைப்பினர் இந்து இயக்கத்தினர் ஆகியோரும் அஞ்சலியை செலுத்தினார்கள்.
இதனால் பரபரப்பு காணப்பட்டது இதனிடையே ராஜாக்களின் வாரிசுகளிடையே குழப்பமும் பிரச்சணையும் ஏற்படுவதால் தமிழக அரசு அடுத்த ஆண்டு முதல் இதனை அரசு விழாவாக நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.