காமெடி ஜெயக்குமார்:- ஆட்சிக்கு வந்ததும் தூசிதட்டி உள்ளே தள்ளுவாராம்!

ம.பா.கெஜராஜ்,
அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், நேற்று முன்தினம், கோடநாடு கொலை விவகாரம் தொடர்பாக, பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார். அதற்கு பதில் அளித்து, ஜெயகுமார் பேட்டி அளித்தார்,
அதில் நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் சம்பவத்தில், விரைவாக குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தியவர் பழனிச்சாமி. அவர்களை தி.மு.க.,வினர் ஜாமினில் எடுத்தனர்.
யார் தவறு செய்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற வகையில், பழனிசாமி செயல்பாடு இருந்தது. அதை மறைத்து விட்டு பேசுவதை, எந்த தொண்டனும் ஏற்க மாட்டான்.தி.மு.க.,வோடு சேர்ந்து, பன்னீர்செல்வம் வேலை செய்து வருகிறார். அவருடன் மருது அழகுராஜ் சேர்ந்துள்ளார். தி.மு.க., ஆட்சியில் நடந்த படுகொலைகளை, அக்கட்சி கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாங்கள் கண்டிப்பாக ஆட்சிக்கு வருவோம்; அப்போது, இதை எல்லாம் தூசி தட்டி, உரியவர்களை குற்றவாளிகள் கூண்டில் நிற்க வைப்போம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தி.மு.க., பொய் வழக்கு போட்டு வருகிறது. எந்த வழக்கு போட்டாலும், அதை எதிர்கொள்ள, அ.தி.மு.க., திராணியோடு உள்ளது. சசிகலா, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்.
அ.தி.மு.க.,வை பொறுத்தவரை ஒற்றைத் தலைமை, எந்த காலத்திலும் சசிகலா, தினகரனை ஏற்றுக் கொள்ளாத நிலை தான் நீடிக்கிறது. பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு வரட்டும், பொதுக்குழு யாரை ஏற்கிறதோ, அவரை அவர் ஏற்கட்டும் என்றார்.