கருணாநிதி உருவாக்கிய நவீன தமிழ்நாடு:- கட்டுரை போட்டிக்கு ஏற்பாடு!

ம.பா.கெஜராஜ்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தாய்த் தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு“ எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளினை “தமிழ்நாடு நாளாக“ கொண்டாடப்படும் என அறிவிக்கப்பெற்றது.
அதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10000/-, இரண்டாம் பரிசு ரூ.7000/-, மூன்றாம் பரிசு ரூ.5000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெறவுள்ளன. அவ்வகையில் வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 06.07.2022 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளன.
பின்வரும் தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும்
*தமிழ்நாடு உருவான வரலாறு
*மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும்
*தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள்
*பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு
*சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம்
*மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார்
*மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி.
*சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு
*எல்லைப்போர்த் தியாகிகள்
*முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு
அப்போட்டிகளுக்கு வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அனைத்திற்கும் முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பப்பெற்றுள்ளது. முதற்கட்டமாக கீழ்நிலையில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி மாணவர்களைத் தெரிவுசெய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பெற்றுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி வெளியீடு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர் மாவட்டம்.
இதே போன்ற நிகழ்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும், பள்ளி மாணவர்கள் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா இ.ஆ.ப. அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி வெளியீடு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருவண்ணாமலை மாவட்டம்.