காங்கிரஸை திமுக ஏமாற்றிவிட்டதாம்! அடேங்கப்பா?

கு.அசோக்,
ஊரக உள்ளாட்சித்தேர்தலில் திமுக முறையாக கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு இடங்களை ஒதுக்காமல் ஏமாற்றியது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் வளாகத்தில் நகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வாங்கும் கூட்டம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்றது.
அப்பொழுது பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாநில பொறுப்பாளர் அருள் அன்பரசு மற்றும் மாவட்ட தலைவர் பிரபு ஆகியோர்கள் கூறுகையில் ஏற்கனவே நாங்கள் வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளில் தனியாகவே நின்று வெற்றி வாய்ப்புகளை பெற்றுள்ளோம்.
ஆதலால் திமுகவுடன் கூட்டணி வைக்கும் போது எங்களுக்கான 20 சதவிகித ஒதுக்கீட்டை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் கிராமப்புற ஊரக உள்ளாட்சித்தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் கட்சிக்கு முறையாக இடங்களை ஒதுக்காமல் திமுக ஏமாற்றிவிட்டது.
ஆனால் இம்முறை அதுபோல் நடக்காமல் இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.
அது சரி