ஓபிஎஸ்ஸின் தாயார் மறைவுக்கு அதிமுகவினர் இரங்கல் தெரிவிக்காதது அரசியல் நாகரீகம் இல்லை!

ஜி.சாந்தகுமார்,
கடந்த 24 ஆம் தேதி ஓ.பி.எஸ்.அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் இறந்து விட்டார்.
அவரது மறைவுக்கு இரவு 11.30 மணிக்கே முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனையடைகிறேன்.
ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டார்.
அவரை போலவே அரசியல் நாகரீகம் தெரிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொலைபேசி வாயிலாக ஓபிஎஸ்ஸூக்கு ஆறுதல் கூறினார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதேபோல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ரா.முத்தரசன்,சசிகலா. அம க. பொதுச்செயலாளாடி.டி.வி. தினகரன், திரைப்பட பாட லாசிரியர் கவிஞர் வைரமுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொய்தீன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி தொகுதி எம்.பி. சு.திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தன பாலன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர்.
அந்த வரிசையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியின்போது, 'தாயாரை இழந்து வாடும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்' என்று பட்டும் படாமலும் தெரிவித்தார்.
ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்கள் உடனடியாக ஆறுதல் கூறியநிலையில் அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், யாருமே இரங்கல் தெரிவிக்காதது அரசியல் நாகரீகம் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அரசியல் ரீதியாக எத்தனை முரண் இருந்தாலும் துயர்மிகு நேரத்தில் ஆறுதல் சொல்லக்கூட வாய் திறக்காத அதிமுக தலைவர்களின் செயல்பாடு மோசமான முன்னுதாரணமாக இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதிமுக தலைமையின் பேச்சுக்கு ஆளாகக்கூடும் என்பதால் தேனி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளும் தலைகாட்ட மறுத்துள்ளனர். இரவு 10 மணியளவிலே அவர் உயிரிழந்த போதும் காலை 10 மணி வரை பெரியகுளம் வீட்டில் சொல்லிக்கொள்ளும் படியாக கூட்டம் கூடவில்லை.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பழனியம்மாள் படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், "ஓபிஎஸ்சின் தாயார் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். ஈரோடு கிழக்கு பிரசாரத்தை முடித்து விட்டு இங்கு வருகை தந்தேன். ஓபிஎஸ்சை சந்தித்து ஆறுதலாக இருந்து அவருடைய துயரத்தில் நானும் பங்கு கொண்டேன். மதிப்புமிக்க தாயார் பழனியம்மாள் அவர்களுக்கு கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறேன்" என்றார்.
இந்த அரசியல் நாகரீகம் அ.தி.மு.க.வினருக்கு இல்லாதது அதிர்ச்சியே?"