பாஜக பக்கம் யூடர்ன் அடிக்கும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்! தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கவும் வன்முறையை தூண்டவும் சதி!! சபாநாயகர் மற்றும் அமைச்சர் கருத்து!

பாஜக பக்கம் யூடர்ன் அடிக்கும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்! தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கவும் வன்முறையை தூண்டவும் சதி!! சபாநாயகர் மற்றும் அமைச்சர் கருத்து!

 ஜி.சாந்தகுமார்,

பாஜகவும், இந்து மக்கள் கட்சியும் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கவும் வன்முறையை தூண்டவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா என்று சபாநாயர் அப்பாவு அவர்களும்ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்பவரை பாஜக வக்கீல் ஜாமினில் எடுத்திருக்கிறார். ஆகவே இது இதனால் பாஜகவினரின் சதித்திட்டம் என சட்டத்துறை அமைச்சரு¢ தெரிவித்துள்ளனர்.

 சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத்தை சிறையில் இருந்து பிணையில் எடுத்தவழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல்தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது.

 இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் அப்பாவு

சென்ற 2017ம் ஆண்டில் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவின் தலைமையகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. தற்போது ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுபோன்று மற்றொரு சம்பவம் உள்பட இந்த 4 சம்பவங்களிலும் ஒரே நபர் தொடர்பில் உள்ளார்.

தமிழ்நாட்டில் பொறுத்தவரையில் உள்ள அரசியல் கட்சிகள் எனக்கு தெரிந்து இதுவரை யாரும் பெட்ரோல் குண்டுகள் வீசியது இல்லை.

ஒரு முறை பாஜகவை சேர்ந்த கோவையில் ராமநாதன் என்பவர், திண்டுக்கல்லில் பிரவீன் குமார் திருவள்ளூரில் பரமானந்தம். இவர்களில் ராமநாதன் மற்றும் பிரவீன் இவர்களில் ராமநாதன் மற்றும் பிரவீன் குமார் 2013ம் ஆண்டிலும் மற்றொரு சம்பவம் 2017ம் ஆண்டிலும் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தினர்.

இதேபோல், இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 3 பேரும் பல்வேறு மூன்று சம்பவங்களில் ஈடுபட்டனர்.

  அதனால், பாஜகவும், இந்து மக்கள் கட்சியும் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கவும் வன்முறையை தூண்டவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கமலாலயத்தில் இரு அணிகளாக செயல்படுவதாகவும், அவர்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

அதனால், ஒரு குறிப்பிட்ட கட்சி, ஒரு குறிப்பிட்ட இயக்கம் மட்டும் தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறது. கட்சியின் கவனத்தை ஈர்க்கவே பெட்ரோல் வீச்சு சம்பவங்களநடத்துகின்றனர். ஆனால் ஒன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டத்தின் கீழ் ஆட்சியை நடத்துவார். அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விசாரித்து உண்மைகுற்றவாளியை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்பதை உறுதியாக சொல்கிறேன்என்று சொன்னார்.

 ஆக ஆளுநர் மாளிகை சாலையில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு குற்றமானது பாஜக பக்கம் யூடர்ன் அடித்திருக்கிறது.