திமுக அறிவித்த டாப் 21 வேட்பாளர்கள்! அதிமுகவும் கடமைக்கு பட்டியல் (16) வெளியிட்டிருக்கிறது!

ம.பா.கெஜராஜ்,
2024- நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு பிரித்தது போக மீதி உள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. அந்த வகையில் தற்போது திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
திமுக சார்பில் 21 வேட்பாளர்கள்,
தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்
மத்திய சென்னை - தயாநிதி மாறன்
வட சென்னை - கலாநிதி
ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம் - செல்வம்
வேலூர் - கதிர் ஆனந்த்
அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
திருவண்ணாமலை - அண்ணாதுரை
ஆரணி - தரணிவேந்தன்
கள்ளக்குறிச்சி - மலையரசன்
தருமபுரி - மணி
கோவை - கணபதி ராஜ்குமார்
பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி
சேலம் - டி.எம்.செல்வகணபதி
ஈரோடு - பிரகாஷ்
நீலகிரி (தனி) - ஆ.ராசா
தஞ்சாவூர் - முரசொலி
பெரம்பலூர் - அருண் நேரு
தேனி - தங்க தமிழ்செவன்
தென்காசி (தனி) - ராணி
தூத்துக்குடி - கனிமொழி
11 புதுமுகங்கள்.
புதிய வேட்பாளர்களாக 11 பேர் அறிவிக்கபட்டுள்ளனர். 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேட்பாளர்கள் பட்டியலில் 6 வழக்கறிஞர்கள், 2 முனைவர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 2 மருத்துவர்கள், 19 பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
வாரிசுகள் அடிப்படையில் பார்த்தால் எதிர்பார்க்கப்பட்டது போலவே அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், தவிர கனிமொழி, கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
அதிமுக சார்பில் 16 வேட்பாளர்கள்
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டிருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.அதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை வடக்கு - ராயபுரம் மனோ
சென்னை தெற்கு - ஜெயவர்தன்
காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர்
அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
கிருஷ்ணகிரி - வி.ஜெயப்பிரகாஷ்
ஆரணி - ஜி.வி.கஜேந்திரன்
சேலம் - விக்னேஷ்
தேனி - நாராயணசாமி
விழுப்புரம் (தனி)- ஜெ.பாக்யராஜ்
நாமக்கல் - எஸ்.தனிமொழி
ஈரோடு: ஆற்றல் அசோக்குமார்'
கரூர்: கே.ஆர்.எல்.தங்கவேல்
சிதம்பரம் (தனி): சந்திரகாசன்
நாகப்பட்டினம் (தனி)- சுர்சுத் சங்கர்
மதுரை: பி.சரவணன்
ராமநாதபுரம்: பா.ஜெயபெருமாள்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அபார வெற்றி பெறும். அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிக்கையை விரைவில் எதிர்பார்க்கலாம்" என்று சொன்னார்.