முட்டை வியாபாரியிடம் 2 லட்சத்து 19 ஆயிரம் பறிமுதல்! தேர்தல் விதிமுறை எதிரொலி!

முட்டை வியாபாரியிடம் 2 லட்சத்து 19 ஆயிரம் பறிமுதல்! தேர்தல் விதிமுறை எதிரொலி!


ஜி.கே.சேகரன்,

வாணியம்பாடி -திருப்பத்தூர் சாலையில் உள்ள செட்டியப்பனூர் பகுதியில் உரிய ஆவணமின்றி டாட்டா ஏசி வாகனத்தில் கொண்டுவரப்பட்ட  இரண்டு லட்சத்து 19 ஆயிரம் ரூபாயைதேர்தல் பறக்கும் படையினர்  பறிமுதல்  செய்தனர்.

வேலூர் மாவட்டம்,அணைக்கட்டு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் விஜயன். இவர் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அணைக்கட்டில் இருந்து முட்டை ஏற்றி வருவதற்காக இரண்டு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் எடுத்துகொண்டு டாட்டா ஏசி வாகனத்தில் நாமக்கல் சென்றுள்ளார்.

 அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட செட்டியப்பனூர் பகுதியில்  தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில்  ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது விஜயன் ஓட்டி சென்ற டாட்டா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் டாட்டா ஏசி வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் கட்டுகள் கண்டறியப்பட்டு தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெயசித்ரா பறிமுதல் செய்தார்.

 அதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி  தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ ராஜனிடம் ஒப்படைத்தனர்.