கோவை காந்தி மாநகரில் கூடும் ரோக் இளசுகள்! பகுதிவாசிகள் பீதி!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,

 கோவை மையப்பகுதியில் காந்தி மாநகர் அமைந்துள்ளது, மிகவும் புகழ்பெருமைவாய்ந்த அப்பகுதி சமீப காலமாக ரோக் டைப் இளசுகளின் பிடியில் சிக்கித்தவிக்கிறது.

அதனால் அவர்கள் அட்டகாசம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.

 குறிப்பாக அப்பகுதியில் இருக்கும் டீக்கடை மற்றும் உணவு கடைகளில் மாலை நேரத்தில்  பல ரோக் குழுக்கள் முகாமிடுகிறார்கள்.

  அப்படி கூடும் அவர்கள் திடீரென்று அடித்து கொள்கிறார்கள்.

  பொறுத்து பொறுத்து பார்த்த ஊர் மக்கள் ஒன்று சேர்ந்தவுடன் சொகுசு வண்டியில் ஏறி தப்பி விடுகிறார்கள்.

  இந்த ரோக் இளசுகள் கஞ்சா போன்ற போதை வாஸ்துகளை இங்கு பயன்படுத்துவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது.

  அப்பகுதியில் சிறு குறு தொழில் செய்யும் நிறுவனங்கள் அதிகம் உள்ளதால் அவர்களும், அங்கு வசிக்கும் அப்பகுதியில் பெரியோர்கள், பள்ளி முடிந்து செல்லும் பெண் பிள்ளைகள் அனைவரும் இது போன்ற சமூக விரோதிகளால் பயந்து பயந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

 எனவே காந்தி மாநகர் பகுதி ஊர் மக்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் எங்கள் பகுதியில்  அமைதி நிலை உருவாக வேண்டும் என்றும், சட்ட ஒழுங்கு பிரச்சினை வராமல் தடுக்க மாவட்ட ஆட்சியரும், மாவட்ட ஆணையாளரும், அப்பகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி காவல் நிலையமும் இணைந்து சமூகவிரோதிகளை களை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.