ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசாரை கண்டித்து தர்ணா!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை, புதூர்நாடு அடுத்த தகரகுப்பம் பகுதியை சேர்ந்த காளி என்பவருக்கும் சாராய வியாபாரி ஜெயமணி என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மணியின் உறவினர்கள் காளி அவரது தம்பி குமார் ஆகியோரை கள்ள துப்பாக்கி காட்டி மிரட்டி சராமரியாக தாக்கியதில் பலத்த படுகாயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் ஜெயமணி, சத்தியராஜ்,தொண்டன் காளி,கோவிந்தசாமி ஆகிய நான்கு நபர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர்.
இதனை அறிந்த காளி அவரது தம்பி குமார் ஆகியோரின் குடும்பத்தினர், நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது.