இறந்தவரின் உடலை ஆற்றைக் கடந்து செல்லும் அவலம்!

இறந்தவரின் உடலை ஆற்றைக் கடந்து செல்லும் அவலம்!
கு.அசோக்,
திருப்பத்தூர் அருகே இறந்தவரின் உடலை ஆற்றைக் கடந்து சென்று அடக்கம் செய்யும் அவலம்
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த காக்கனாம்பாளையம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டி அப்பகுதி மக்கள் பலமுறை கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் அவர்கள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்த நிலையில் காக்கணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இன்று உடல்நிலை கோளாறு காரணமாக உயிரிழந்தார்.
அவரது உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் காக்கனம்பாளையம் பகுதியில் இருந்து பாம்பாற்றை கடந்து மிகவும் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து மறு கரையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
மேலும் இந்தப் பகுதியில் மழைக்காலம் வந்தால் மத்தியில் இருந்து சுடுகாட்டிற்கு செல்வதே மிகவும் சிரமம் ஏற்படுகிறது எனவே அப்பகுதி மக்கள் உடனடியாக பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.