கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த பாசக்கார மனைவி!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த பாசக்கார மனைவி மீது போலிசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
இது குறித்து போலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், சங்கர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் இவரது மனைவி சங்கர ஆவுடையம்மாள். இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இதனால் சங்கர ஆவுடையம்மாள் தனது பெற்றோர் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அருணாச்சலம் உடலில் தீக்காயங்களுடன் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மனைவியே தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டதாக கதறுகிறார். மாரிமுத்துவின் வாக்கு மூலத்தை அடிப்படையாக கொண்டு அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது போலிஸ்.