நோ காம்பரமைஸ்! மேகதாது அணை மேட்டர்... அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

நோ காம்பரமைஸ்! மேகதாது அணை மேட்டர்... அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

 ஜி.கே.சேகரன்,

   மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் பிரச்சணைகளை தற்போது தான் உணர்ந்திருக்கிறார் - சமரச பேச்சுக்கு இடமில்லை - அனைக்கட்டப்பட்டால் தமிழகம் முற்றிலும் பாதிக்கபடும் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி.

வேலூர்மாவட்டம், காட்பாடியில் 45 திருக்கோவில்களுக்கு அறங்காவல் குழுவிற்கு பொறுப்பாளர்கள் நியமன ஆணையை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார் உடன் அறங்காவல் குழு தலைவர் அசோகன் ,வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார்,துணை மேயர் சுனில் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

  பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் மேகதாது விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் இப்போது தான் பதவிக்கு வந்தவர்.

  காவிரி பிரச்சணையை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை, மேககதாது அணை கட்டினால் தமிழகம் பெரிதளவில் பாதிக்கப்படும், எந்த ரூபத்திலும் எந்த சமரசத்திலும் மேகதாது கட்டுவதை தமிழகம் அனுமதிக்காது.

 மேகதாது அணைகட்டும் விஷயத்தில் எந்த சமரசமும் செய்யமாட்டோம்,  உச்சநீதிமன்றத்திலும் இந்த பிரச்சணை எழவில்லை ஆனால் இடையில் சிலர் இதனை தூக்கி வைக்கின்றனர் அதை தான் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாரும் பேசுகிறார் என அவர் சொன்னார்.