வெற்றி பாதையில் காங்கிரஸ் வேட்பாளர்!

ஜெ.அருண் ஹென்றிக்ஸ்,
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதில் அதிமுக பின்னடவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2 அறைகளில் 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 5 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாத காலமாக ஈரோட்டில் அரசியல் கட்சியினர் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 27ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
திமுக கூட்டணி வேட்பாளருக்கும் அதிமுக வேட்பாளருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 25 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. 15 சுற்றுகள் முடிவில் இந்த வாக்கு வித்தியாசம் மேலும் அதிகரிக்குமா, அதிமுக முந்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆக திமுக தோளில் அமர்ந்து காங்கிரஸ் வெல்கிறது.
இந்நிலையில் மகிழ்ச்சி வெள்ளத்தில் பொங்கிய திமுக அமைச்சர்கள் துரைமுருகன் நேரு பொன்முடி ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு அவர்களும் ஸ்டாலினை சந்தித்து சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர்