அதிக பெண்கள் உயர் கல்வியை பயில்கின்றனர்! ஊரிசு விழாவில் பேச்சு!

கு.அசோக்,
தமிழகத்தில் பெண்கள் அதிக அளவில் உயர் கல்வியை பயில்கின்றனர், இது மகிழ்ச்சியளிக்கிறது நாட்டில் உயர்கல்வியில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது ஒசூர் அரசு கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதரன் வேலூரில் பட்டமளிப்பு விழாவில் பேச்சு
வேலூர்மாவட்டம், வேலூர் மிகவும் பழமை வாய்ந்த ஊரீசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
வேலூர் சி.எஸ்.ஐ பேராயர் சர்மா நித்யானந்தம் தலைமையில் நடைபெற்ற இதில் ஒசூர் அரசு கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 1131 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஒசூர் அரசு கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதரன் பேசுகையில் நீங்கள் பட்டம் பெற காரணமான தாய் தந்தையை அதாவது உங்களின் பெற்றோர்களை மறக்க கூடாது, இந்தியாவில் மாணவர்கள் உயர்கல்வி சேரும் 27.1 சதவிகிதமாக உள்ளது ஆனால் நம் தமிழ்நாட்டில் உயர்கல்வி சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 51.4 சதவிகிதமாக உள்ளது.
இது நாட்டிலேயே உயர்கல்வியில் அதிகம் சேரும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
கடந்த 2021 -2022 ஆம் ஆண்டில் 4,38,207 மாணவர்கள் உயர் கல்வியில் பயில் சேர்ந்தனர் இதில் ஆண்கள் 1,92,230 பெண்கள் 2,45,977 இதன் மூலம் அதிக அளவு பெண்கள் உயர்கல்வி பயிலும் மாநிலமாகவும் தமிழகம் திக்ழ்கிறது.
தற்போது வகுப்பறைகளில் மாணவர்கள் நடக்கும் விதம் வேதனையளிக்கிறது எனவே கடின உழைப்புடன் நேர்மையாக இருந்தால் உங்களுக்கு வெற்றி உறுதி என்று பேசினார்.