நறுவீ மருத்துவமனைக்கு காவல் துறை சார்பாக நன்றி தெரிவித்த வேலூர் எஸ்.பி.!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் நறுவீ மருத்துவமனை மற்றும் வேலூர் ரோட்டரி சங்கம் இணைந்து போக்குவரத்து காவலர்களுக்கான நுரையீரல் பரிசோதனை முகாமை நடத்தினர். இதற்காக காவல் துறையின் சார்பில் நன்றி தெரிவித்த வேலூர் எஸ்.பி. போக்குவரத்து காவலர்களுக்கு முககவசம் அணிய அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ் கண்ணன், இ.கா.ப. அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த பரிசோதனை முகாமில் வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் பங்கேற்று சிறப்பு உரை நிகழ்த்துகையில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலரின் நலனுக்காக இந்த முகாம் நடத்தப்படுவது பாராட்டுக்குறியது.
சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு நுரையீரல் மற்றும் சுவாச பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது . இந்த பாதிப்பு அதிகரிக்கும் போது அவர்களுக்கு கொரோனா நோய் எளிதில் தாக்கும் நிலை உண்டாகும் . இதை கருத்தில் கொண்டு வேலூர் ரோட்டரி சங்கத்தின் வேண்டுகோலின் பேரில் போக்குவரத்து காவலர்களின் நலனுக்காக எங்களது நறுவீ மருத்துவமனை இந்த முகாமை நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்காக வேலூர் ரோட்டரி சங்கத்திற்கும் மாவட்ட காவல் துறைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . வருமுன் காப்போம் என்பது எல்லோருக்கும் பொதுவானது . அதிலும் குறிப்பாக உடல் நலம் காப்பது முக்கியமானது.
வேலூர் மாநகரம் போக்குவரத்து நெரிசல் மிக்க மாநகரமாக உள்ளது, தற்போது இது ஸ்மார்ட் சிட்டியாக உருவாகி வருகிறது . அதன் மூலம் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்பு பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.
எனினும் போக்குவரத்து காவலர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முகாம் அவர்களின் நுரையீரல் பாதிப்பை தடுக்க உதவியாக இருக்கும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ் கண்ணன் வைத்து பேசியதாவது:- வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற பிறகு போக்குவரத்து காவலர்களின் நலுனுக்காக நடத்தப்படும் முதல் மருத்துவ பரிசோதனை முகாம் இது. இந்த முகாமினை நடத்தும் வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் சமுதாய நல பணிகளில் ஆர்வம் மிக்கவர்.
அவரது மருத்துவமனை சார்பில் இந்த பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் . போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலர்களை மாசு எளிதாக தாக்கும் நிலை உள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இது கொரோனா நோய் எளிதல் தாக்குவதற்கு வழி வகுக்கும் . போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் கண்டிப்பாக எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் வேலூர் ஆபிசர்ஸ் கிளப் கௌரவ செயலாளர் வழக்கறிஞர் என் . சிவராஜ் , வேலூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் வி . சீனிவாசன் , எஸ் . எம்பெருமாள் ஆகியோர் முகாமை வாழ்த்தி பேசினர் . இதில் , வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.எஸ் . சுந்தரமூர்த்தி , துணை கண்காணிப்பாளர் இ.திருநாவுக்கரசு மற்றும் காவல் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
முடிவில் , வேலூர் ரோட்டரி சங்க செயலாளர் பி . குமார் நன்றி தெரிவித்தார் . வேலூர் நறுவீ மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் சுவாச சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் பிரின்ஸ் ஜேம்ஸ் , மருத்துவர் டி.வி. ராஜகோபால் மற்றும் மருத்துவ குழுவினர் போக்குவரத்து காவலர்களுக்கு நு? மற்றும் சுவாச மருத்துவ பரிசோதனை செய்தனர்.