ஏ.ஆர்.ரஹ்மானை பாடவிடாமல் தடுத்த போலிசார்! நடந்தது என்ன?

ஏ.ஆர்.ரஹ்மானை பாடவிடாமல் தடுத்த போலிசார்! நடந்தது என்ன?

ரவி.ஜார்ஜ்,

 ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருக்கும் ராஜ் பகதூர் ஹில்ஸில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் ரஹ்மான் பல பாட்டுகளை பாடிய போது ரசிகர்கள் உற்சாகமானார்கள்.  இந்நிலையில் அதை சீர்குலைக்கும் வகையில் நிகழ்ச்சியை போலீசார் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

  இது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூறியதாவது,

இரவு 10 மணிக்கு மேல் இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதி இல்லை. இந்நிலையில் 10 மணியை தாண்டி ரஹ்மான் பாடிக் கொண்டிருந்தார். அவர் தன் கடைசி பாடலை பாடினார். அப்படி பாடியபோது 10 மணிக்கு மேல் ஆகிவிட்டதை அவர் கவனிக்கவில்லை.

  அப்போது அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் மேடைக்கு சென்று ரஹ்மானிடம் பாடுவதை நிறுத்த சொன்னார்கள்.  

  ரஹ்மானும் வேறுவழியின்றி பாடலை நிறுத்திக்கொண்டார்.

  நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.