என் வாக்கு விற்பனைக்கு அல்ல! தேசிய வாக்காளர் தினத்தில் உறுதி!

என் வாக்கு விற்பனைக்கு அல்ல! தேசிய வாக்காளர் தினத்தில் உறுதி!

 கு.அசோக், க.பாலகுரு,

 வேலூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

 வேலூர்மாவட்டம்,வேலூரில் நகர அரங்கில் இருந்து இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

 இதில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று துண்டுபிரசுரங்களை வழங்கி காந்தி சிலையின் அருகில் நிறைவடைந்தது. அதன் பின்னர் வாக்காளர்கள் விழிப்புணர்வு குறித்த பேச்சு போட்டி கட்டுரை போட்டி ஓவிய போட்டி ஆகியவைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரொக்கபரிசினையும் கோப்பைகளையும் வழங்கினார்.

 திருவாரூர்,

14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

திருவாரூர் புதிய இரயில் நிலையத்தில் 14வது தேசிய வாக்காளர் தினம்-2024ஐ முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்து, திருவாரூர், யு.பி திருமண மண்டபத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் மூத்த வாக்காளர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடைகளை போர்த்தி கௌரவித்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,

  18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் வாக்காளராக கட்டாயம் பதிவுசெய்து கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு 18 வயது நிரம்பியவர்களும் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்வதுடன் தங்களது நாட்டின் முன்னேற்றத்திற்கு ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.

  அதனைத்தொடர்ந்து, தேசிய வாக்காளர் தினத்தினையொட்டி நடைபெற்ற ரங்கோலி போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும், பள்ளி கல்லூரி அளவில் நடைபெற்ற சுவரொட்டிவரைதல் போட்டி, பாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற 12 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகையுடன் பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்.

  இப்பேரணியானது, திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நிறைவுபெற்றது. இப்பேரணியில் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி, வி.எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வி.ஆர்.எம் மேல்நிலைப்பள்ளி, டிரினிட்டி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 500 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

  இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர்.சங்கீதா, நகராட்சி ஆணையர்.மல்லிகா, வட்டாட்சியர்.நக்கீரன், தனி வட்டாட்சியர் (தேர்தல்).உஷா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம்

  திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைப்பெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் துவங்கி வைத்தார்.இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவிகள், மகளிர் மன்றத்தை சேர்ந்த பெண்கள், அங்கன்வாடி பணியாளர்கள்  கலந்துக்கொண்டனர்.

   ஊர்வலத்தில் வாக்களிப்பதே சிறந்தது நிச்சயம் வாக்களிப்பேன் என் வாக்கு விற்பனைக்கு அல்ல100% வாக்கு நமது இலக்நம் வாக்கு நம் உரிமை வாருங்கள் வாக்களிப்போம்வாக்கின் வலிமை தேசத்தின் வலிமை உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.

  தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பல்வேறு போட்டிகள் வைத்து அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கினார்.

  இந்த ஊர்வலத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட திட்ட இயக்குனர் உமாராணிகோட்டாட்சியர் பானு, வட்டாட்சியர் சிவப்பிரகாசம், மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.