மாஜி அமைச்சருடைய மருமகளின் உயிரை எரித்த தீபம்! கோட்டாட்சியர் விசாரணை!

மாஜி அமைச்சருடைய மருமகளின் உயிரை எரித்த தீபம்! கோட்டாட்சியர் விசாரணை!

ஜே.தே.பிரகாசம்,

   அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் இளைய மகன் சசிமோகன் என்பவரின் மனைவி பூர்ணிமா கடந்த 18-ந் தேதி மாலை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள தனது வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது விளக்கு தீ பிடித்தது. தீ விபத்தில் பூர்ணிமா படுகாயமடைந்துள்ளார். சுமார் 80% தீ காயத்துடன் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் ஒரு வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஜன  25) காலை பூர்ணிமா உயிரிழந்தார்.

 இறப்பு செய்தியை அறிந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார்.  தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட அதிமுக மாவட்ட பொருளாளர் காகிதப்பட்டரை மூர்த்தி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனை சந்தித்து ஆறுதல் கூறினர்.

   இந்நிலையில் இறந்த பூர்ணிமாவுக்கும் அன்பழகனின் மகன் சசிமோகனுக்கும் திருமணம் நடந்து முடிந்து நான்கு ஆண்டுகள் ஆவதால் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.