ஏப்ரல் 10-ல் மாநில அளவிலான பேரணி சென்னையில் நடைபெறும்! அரசு அலுவலக உதவியாளர் சங்கம் அறிவிப்பு!

கு.அசோக்,
12- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கத்தின் சார்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி மாநில அளவிலான பேரணி சென்னையில் நடைபெறும் அகில இந்திய தலைவர் வேலூரில் பேட்டி.
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் மதுரம் மற்றும் அகில இந்திய தலைவர் கனேசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் தலைமை செயலகம் முதல் அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும்.
மாநகராட்சி நகராட்சி பணிகளில் பணிகளை தனியாருக்கு வழங்கும் திட்டத்தை அரசு உடனே கைவிட வேண்டும்.
மாநிலம் முழுவதும் உள்ள 12526 ஊராட்சிகளில் பணிபுரியும் மேல் நிலை தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு அரசு காலமுறை ஊதியம் வழங்கவும் நகராட்சி மாநகராட்சி பேரூராட்சிகளில் தின கூலியாக பணியாற்றுபவர்களுக்கும் பல்நோக்கு பணியாளர்களுக்கும் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் விடுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரியும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னையில் மாநிலம் தழுவிய கண்டன பேரணியை நடத்துவது எனவும் அரசு எங்களை அழைத்து பேசவில்லை என்றால் அன்று மாலையே மாநிலம் தழுவிய போராட்ட அறிவிப்பை அமைப்பு அறிவிப்பது எனவும் கூறினார்கள்.
பேட்டியின் போது நிர்வாகிகள் இளங்கோவன் ,செல்வம், ஜெயசந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.