கத்தியால் வெட்டப்பட்ட செய்தியாளருக்கு 3 லட்சம் நிதி அறிவித்த முதலமைச்சர்! தூக்கியடிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்!

கத்தியால் வெட்டப்பட்ட செய்தியாளருக்கு 3 லட்சம் நிதி அறிவித்த முதலமைச்சர்! தூக்கியடிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்!

  ம.பா.கெஜராஜ்,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதிக்கென தனியார் தொலைகாட்சி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் நேச பிரபு

இவர் நேற்று ரவுடிகளால் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தனியார் அனுமதி பெற்று தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

 நேச பிரபு தன்னை ரவுடிகள் தாக்க வருகிறார்கள் என போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார், மேலும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்திருக்கிறார். ஆனால் காவலர்கள் வர தாமதமானதால்,

ரவுடிகளால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்க்கிறார்.

 நேச பிரபு ரவுடிகளால் வெட்டப்பட்ட சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர்

வி.இ.எஸ்.ஜார்ஜ் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துக்கொண்டதுடன், நேச பிரபுவின் சிகிச்சைக்காக தமிழ்நாடு அரசு உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

  மேலும் நேச பிரபு தனக்கு ஏற்படப்போகும் ஆபத்து குறித்து காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவித்தும் கூட அவர்கள் மெத்தனம் காட்டியிருக்கிறார்கள். காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் நேச பிரபுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது, ஆகவே சம்மந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

 இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளா நேச பிரபு  தாக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், சிகிச்சையில் உள்ள செய்தியாளருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

  முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக் குறிப்பின் விவரம் வருமாறு, "திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் நேச பிரபு நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்வு மிகவும் கண்டனத்துக்குரியது.

  இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

   சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேச பிரபு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்,  மருத்துவ சிகிச்சையில் உள்ள நேசப் பிரபுவுக்கு, பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ 3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டிருக்கிறது.

  இந்நிலையில் இது தொடர்பாக பிரவீன் மற்றும் சரவணன் ஆகியோரை கைது செய்துள்ளதாக மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி தெரிவித்திருக்கிறார்.