மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ!

 மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ!

 டி.இ.முகமது,

   பாமக எம்எல்ஏ ஒருவர், மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 இது பற்றின விவரம் வருமாறு, சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் கலந்து கொண்டு பேசினார்.

 அப்போது தி.மு.க.வைச் சேர்ந்தவர்களுக்கு பேச அனுமதி வழங்கவில்லை என கூறி, வாக்குவாதம் ஏற்பட்டது. அப்படியிருக்க எம்.எல்.ஏ. அருள் மாணவர்கள் மத்தியில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

 உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னிச்சிடுங்க. அரசியல் பண்ண விரும்பலை. நல்ல ஒழுங்கத்த கத்தக்கொடுக்கற இந்த புனிதமான இடத்தில் உங்களுக்கு அவமரியாதை, அசிங்கப்படுத்திட்டாங்க. கட்சிக்காக பேசவில்லை.

 இங்கு நடந்தவை அனைத்திற்கும் மாணவர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். "என்னை மன்னித்து விடுங்கள்" என்று மாணவர்கள் காலில் சட்டென்று விழுந்தார். அப்போது பலரும் அவரை தடுத்த நிலையில், இரண்டு முறை மாணவ மாணவிகள் முன்பாக விழுந்து மன்னிப்பு கேட்டதுடன், இங்கு நடந்தவற்றை மறந்து விட்டு மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், சைக்கிள் ஓட்டும்போது சாலையில் கவனம் செலுத்த வேண்டும். சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுரை கூறிவிட்டு, மீண்டும் மாணவ மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டார். இதை அடுத்து மாணவர்களுக்குச் சைக்கிள்களை வழங்கினார்.