ஆந்திராவில் பிடிபட்ட பல்லாவரம் எம்.எல்.ஏ.வின் மகன் - மருமகள்!

ஆந்திராவில் பிடிபட்ட பல்லாவரம் எம்.எல்.ஏ.வின் மகன் - மருமகள்!

ம.பா.கெஜராஜ்,

 பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. வின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலைபார்த்து வந்த 18 வயது கொண்ட கிராமத்து பெண் சமீபத்தில் அடித்து சித்ரவதை செய்யப்பட்டார் என புகார் எழுந்தது. இந்நிலையில், நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

  பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் ஆண்டோவையும் மனைவி மெர்லினாவையும் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தனிப்படை போலீஸார் ஆந்திராவில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

  இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடையும் தினத்தில், தங்களது ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரி இவர்கள் இருவரும் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவர்கள் இருவரும் போலிசில் பிடிபட்டனர்.