காலி அரசு இடங்களில் மரக்கன்று நடுங்கள்! வேலூர் கலெக்டர் பேச்சு!

காலி அரசு இடங்களில் மரக்கன்று நடுங்கள்! வேலூர் கலெக்டர் பேச்சு!

  ஜி.கே.சேகரன்,

 கால நிலைமாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள இடங்களில் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் - கால நிலைமாற்றம் குறித்த கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு.

 வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைத்துத்துறை அரசு அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கூட்டம் நடந்தது.

    இதில் மாவட்ட வன அலுவலர் தயாநிதி, திட்ட இயக்குநர் ஆர்த்தி உள்ளிட்டோரும் திரளான அரசு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் கால நிலைமாற்றம் ஏற்பட்டு வருகிறது இதனால் பஞ்ச பூதங்களான பூமி, ஆகாயம், நீர், நெருப்பு, காற்று ஆகியவைகள் மூலம் பல்வேறு இயற்கை சீற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

   எனவே இதனை தடுக்க வேண்டும் என்றால் நாம் இயற்கை பாதுகாப்பது தான் ஒரே வழி குளிர்பிரதேசங்களில் அடர்காடுகள் இருக்கும் அதை போல் நமது தட்ப வெட்ப நிலைக்கு ஏற்றார் போல நாம் மரங்களை நட வேண்டும்.

  அதிலும் குறிப்பாக அரசு அலுவலக வளாகங்களில் காலியாக உள்ள இடங்களில் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் அரசு அதிகாரிகள் இதனை கடைபிடிக்க வேண்டும் அப்போது தான் காலநிலைமாற்றத்தால் ஏற்படவுள்ள இயற்கை சீற்றங்களை தடுக்க முடியும் என பேசினார்.