ஊழலிலும் வாலாஜா நகராட்சி முதலிடம்!

கு.அசோக்,
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா நகராட்சியில் நடைபெறும் ஊழல் மற்றும் அலட்சியப் போக்கை கண்டித்து தேசிய திராவிட கழகத்தினர் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் முதல் நகராட்சியாக திகழும் வாலாஜாபேட்டை நகராட்சி ஊழலிலும் முதலாவதாக திகழ்கிறதாம். இதனைக் கண்டித்து தேசிய திராவிட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட கழக செயலாளர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பூட்டுதாக்கு நித்யா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பெண்கள் என அனைவரும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
குறிப்பாக நகராட்சி நிர்வாகத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் திட்டங்களில் அதிகளவில் கையூட்டு நடைபெறுவதாகவும் மக்கள் வரி வீணாகி போகின்றது மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சியிலும் மக்களுடைய திட்டப் பணிகள் தொடங்கியும் தற்போது எந்த ஒரு திட்டங்களும் இந்த வாலாஜாப்பேட்டை நகராட்சியில் நடைபெறவில்லை என குற்றஞ்சாட்டி காந்தி சிலை முன்பாக மழையில் நனைந்தபடி கைகளில் கொடிகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்களை வெளிப்படுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.