மாணவிகள் முயன்றால் பிரதமராகலாம்! டிஐஜி ஆனிவிஜயா பேச்சு!

மாணவிகள் முயன்றால் பிரதமராகலாம்! டிஐஜி ஆனிவிஜயா பேச்சு!

  கு.அசோக்,

  மாணவிகள் மன உறுதியுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் வேலூர் சரக காவல்துறை துணைதலைவர் ஆனி விஜயா வாலாஜா அரசு மகளிர் கல்லூரி  மகளிர் விழாவில் பேச்சு

 இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில், சமூக சேவையாற்றி சிறப்பாக செயல்பட்ட வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயாவிற்கு சிறந்த பெண்மணிக்காண சாதனை விருது இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் மகளிர் தினமான இன்று வழங்கப்பட்டது.

 முன்னதாக விருது பெறும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த டிஐஜி ஆனி விஜயாவிற்கு மாணவிகள் சிறப்பான வரவேற்பளித்தனர்

 அப்போது பேசிய டிஐஜி ஆனி விஜயா அனைவருக்கும் எனது மகளிர் தின நல் வாழ்த்துக்கள் கூறி,

 வாழ்க்கையில் ஒடும்போது கஷ்டங்கள் துன்பங்கள் அனைத்தும் நம்மளை பின்தொடர்ந்து வரும் அதையெல்லாம் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதை முறியடித்து முன்னே செல்லுங்கள்.

  நீங்கள் கல்லூரி வாழ்க்கையை முடித்து விட்டு வெளியே செல்லும்போது நீங்கள் ஒரு முதல்வராகவும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாகவும் இல்லையென்றால் ஒரு பிரதம மந்திரியாகவும் வரமுடியும் என்று மாணவிகளுக்கு மன உறுதி அளித்தார்.

  இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன், துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, வாலாஜா காவல் ஆய்வாளர் காண்டீபன், அறிஞர் அண்ணா மகளிர் கலைக்கல்லூரியில் முதல்வர் பரமேஸ்வரி, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வரபிரசாத் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவிகள் துறை சார்ந்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.