பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை!

பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை!

சாய் சுரேஷ்,

பல்வேறு மாவட்டங்களில் நடந்த தகவல்களில் சிலவற்றை தொகுத்து வாசகர்களுக்காக வழங்கப்படுகிறது.

 திருவண்ணாமலை மலை மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அளவீடு செய்ய வந்த வருவாய் துறையினரை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஈரோடு திண்டல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.

இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் புரளி என தெரியவந்தது.

 கள்ளக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக பாலினம் கண்டறிந்து கூறி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலினம் கண்டறியும் 2 ஸ்கேன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை

சபரிமலை சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு கேரள வியாபாரிகள் வருகை அதிகரித்தது. மாடுகள் விற்பனையும் விறுவிறுப்புடன் நடைபெற்றது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி.

தென்காசி: சுரண்டை அருகே ராஜகோபாலபேரியில் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யபட்டுள்ளார். பட்டா மாறுதலுக்கு ரூ.4,800 லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்மாவதியை கைது செய்தனர்.

 மேலும்,குண்டாரம்  நீர் தேக்கத்தில் படகு சவாரி செய்யும் போது தவறி விழும் பயணிகளை எப்படி மீட்பது என்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக கூட்டரங்கில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஊத்தங்கரை போச்சம்பள்ளி பர்கூர், தாலுகாவை சார்ந்த வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண்மை துறை அலுவலர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சில்பா பிரபாகர் சதீஷ்தணிக்கை செய்து பாதிக்கப்பட்டுள்ள விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

  மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மரகட்டாவில் நேற்று மாலை சாலையோரம் நின்ற ஒற்றை யானையால் வாகனங்களில் செல்வோர் பீதியடைந்தனர்.சிறிது நேரம் நின்ற யானை பிறகு வனப்பகுதிக்குள் சென்றது. அங்கு சற்று நேரம் பரப்பரப்பை உண்டாக்கியது.

நீலகிரி மாவட்டம் உதகையில் வாகனங்களை தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு நடத்தி காட்டினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூருக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 36 கோடி 50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சி பிரசாந்த் நேரில் ஆய்வு செய்தார்.

  விருதுநகர் வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை, சங்கு வளையல் கண்டெடுப்பு!

 வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை, சங்கு வளையல் கண்டெடுப்பு.

இதுவரை 3,210 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

  நெல்லையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது ஏக்கர் நிலத்தை அபகரித்த நபர்கள் மீது பலமுறை காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்க தாமதிப்பதை கண்டித்து தந்தை தாய் மகன் மகள் பேரன் பேத்தி உள்ளிட்ட குடும்பத்தோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் போராட்டம்.

 திடீரென மூத்த மகன் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு.

  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கரிய கவுண்டன்புதூர், ஸ்ரீராமபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(40) என்பவர் லெக்கையன்கோட்டை மகாலட்சுமி பேக்கரி அருகே விஷ பாம்பு கடித்ததில் ஒட்டன்சத்திரம் சி.எப் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் தரவேண்டிய 28டன்  யூரியா உரங்கள் கோவில்பட்டியில் பதுக்கி வைக்கப்பட்டதை கண்டுபிடித்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.