காட்டுப்பகுதியில் டன் கணக்கில் அழுகிய முட்டை! வாசத்தை நாடி வரும் விலங்குகள்! கிராம மக்கள் அச்சம்!

ஜி.கே.சேகரன்,
பேர்ணாம்பட் அடுத்த எருக்கம்பட்டு வனப்பகுதியில். அழுகிய முட்டைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டும் ஆசாமிகள் யார். இந்த வாசத்தால் தேடி வரும் வன விலங்குகளால் ஆபத்து.
வேலூர்மாவட்டம்,பேரணாம்பட் அடுத்த எருக்கம்பட்டு கிராமம் வனப்பகுதியை ஒட்டிய கிராமம் ஆகும். பொதுவாக இப்பகுதியில் ஆள் நடமாட்டம் மிகவும் குறைவு. இதையே காரணமாக கொண்டு சமூக விரோதிகள் சிலா முட்டை மற்றும் முட்டை கழிவுகள். இறைச்சிக் கழிவுகளை. சட்டவிரோதமாக இந்த வனப்பகுதிக்குள் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர்.
இதனால் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதி மற்றும் கிராமப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன். இறைச்சி மற்றும் முட்டை வாசனையால் அதைத் தேடி வரும் சிறுத்தை மற்றும் வன விலங்குகளால் கிராம மக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
விலங்குகள் கிராமத்திற்குள் வருவதற்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதும். வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் சிறுத்தை ஆடு மற்றும் மாடு போன்ற கால்நடைகளை வேட்டையாடுவதும் வாடிக்கையாக உள்ளது.
அதேபோல் அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் இதை சாப்பிடுவதால் அவற்றிற்கும் வெறி பிடித்ததை போல் சிறுவர்கள் முதியவர்கள் என அவர்களை விரட்டி கடித்து குதறுவது அடிக்கடி நடக்கிறது.
இந்த நிலையில் சமூகவிரோதிகளால் இதுபோன்ற முட்டை மற்றும் முட்டை கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை இங்கு கொட்டுவது பற்றி அந்த கிராமத்து விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
வனப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி முட்டை மற்றும் முட்டை கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டும் சமூகவிரோதிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.