விக்கெட் எடுத்த கலெக்டர்...!

கு.அசோக்,
பொதுமக்கள் மற்றும் போலீஸ் நல்லுறவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பங்கேற்று விளையாடினார்கள்.
வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டரங்கில் பொதுமக்கள் காவல்துறை நல்லுறவை ஊக்குவிக்கும் வகையில் 15 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் ஒரு அணியும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஒரு அணியும் விளையாடினார்கள்.
முதல் டாஸ் வென்று பேட்டிங்க் செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான அணி 15 ஓவர்களில் 103 ரன் கள் எடுத்தது.
இரண்டாவதாக ஆடிய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அணி 84 ரன் கள் மட்டுமே எடுத்தது இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அணி வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் போது கலெக்டர் வீசிய பந்து கேட்ச் ஆக மாறியது. இதன் மூலம் அவர் ஒரு விக்கெட்டை எடுத்தார்.
பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசுகள் மற்றும் சான்றுகளை வழங்கி பாராட்டினார்.
இதில் காவல்துறையினர் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்று விளையாடினார்கள்.