மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு செல்ல மாட்டார்கள்! அதிகாரிகளுக்கு ஆட்சியர் அட்வைஸ்!

ஜி.கே.சேகரன்,
பொதுமக்களுக்கு நம்முடைய கடமையை நாம் சரியாக ஆற்ற வேண்டும்நம்முடைய பணியை நாம் சரியாக செய்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுப்பது குறையும்மக்கள்குறை தீர்வு நாள் முகாமில் அதிகாரிகளுக்கு புதிதாக பதவி ஏற்ற மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அட்வைஸ் வழங்கி பேசினார்.
வேலூர் மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட சுப்புலட்சுமி அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகம் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அதிகாரிகள் மத்தியில் பேசுகையில் பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் மனுக்களை அளிக்கின்றனர் துறைவாரியாக பெறப்படும் மனுக்கள் மீது முழு கவனத்தை செலுத்தி விதிகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் குறையை நிறைவேற்ற முடியுமா என்பதை மிகுந்த கவனத்துடன் நம்முடைய கடமையை நாம் ஆற்ற வேண்டும்.
நம்முடைய பணியை நாம் சரியாக செய்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுப்பது குறையும். பொதுமக்களின் இறுதி நம்பிக்கையாக மனுக்களை அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கும் பொழுது அதை சரியாக கையாண்டால் பொதுமக்கள் மேற்கொண்டு தலைமைச் செயலகத்திற்கோ முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கோ செல்ல மாட்டார்கள்.
நம்முடைய முழு கவனமும் மக்களினுடைய கோரிக்கைகளின் மேல் சிறப்பாக செயல்பட வேண்டும் எனன அதிகாரிகளுக்கு அட்சைஸ் வழங்கினார்.