காட்பாடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி! சட்டமன்ற ஆய்வுக் குழு தகவல்! கல்வி அலுவலர்களுக்கு டோஸ்!!

காட்பாடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி! சட்டமன்ற ஆய்வுக் குழு தகவல்! கல்வி அலுவலர்களுக்கு டோஸ்!!

ஜி.கே.சேகரன்,

 தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு வேலூரில் பல்வேறு இடங்களில் ஆய்வு - காட்பாடியில் புதியதக கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை மேலும் மூன்றடுக்கு கட்டிடமாக மாற்ற இக்குழு பரிந்துரைக்கும் சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் பேட்டி.

வேலூர் மாவட்டம், வேலூருக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு வருகை புரிந்தனர். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு வேலூரில் சுற்றுலா மாளிகை புதிய கட்டிடம் கட்டுமான பணிகள், அதன் பின்னர் தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்தனர்     அப்போது மாணவர்களுக்கு மின் விசிறி மின் விளக்குகள் இல்லை, மேஜை நாற்காலிகள் சரியாக இல்லை மேலும் குடிநீர் குழாயே இல்லை கழிவறைகளும் தூய்மையாக பராமரிக்கபடவில்லை என்று புகார் சொன்னார்கள்.

  இவைகள் கண்ட குழு தலைவர் அன்பழகன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார்.

  அத்துடன் மாணவர்கள் செருப்பு அணிந்து வரவேண்டும், அப்போது தான் நோய் தொற்றாது என அறிவுறுத்தினார்.  இதன் பின்னர் பெண்கள் சிறையின் பின்புறம் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் கட்டிட கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தனர்.

   2023 ஆம் ஆண்டே முடித்திருக்க வேண்டிய பணிகள் 8 மாதங்களாக காலதாமதமாகியுள்ளதாகவும், அதன் பின்னர் கோவிந்தம்பாடியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையையும் ஆய்வு செய்தனர்.

  தொடர்ச்சியாக சேர்க்காட்டில் புதியதாக கட்டப்படும் காட்பாடி அரசு மருத்துவமனை கட்டிடத்தையும் ஆய்வு செய்தனர் உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், அமுலு விஜயம், கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் சுப லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     குழு தலைவர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  காட்பாடியில் கட்டப்படும் புதிய அரசு மருத்துவமனை மூன்றடுக்கு 60 படுக்கைகள் தான் உள்ளது. இதனை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற மேலும் மூன்றடுக்கு கட்டிடம் கட்ட அரசுக்கு இக்குழு பரிந்துரைக்கும்.

   இங்கு சி.டி.ஸ்கேன் எம்.ஆர் ஐ ஸ்கேன் போன்ற அனைத்து வசதிகளும் கொண்டதாக இந்த மருத்துவமனையை அமைக்க பரிந்துரைப்போம்.

   இதனால் இப்பகுதி மக்கள் பயனடைவார்கள், மேலும் அரசு பள்ளியை ஆய்வு செய்தோம் சில குறைபாடுகள் இருந்தது, அதனை சரி செய்ய சுட்டிகாட்டி உள்ளோம். அவைகள் சரி செய்ய சொல்லியிருக்கிறோம் அத்துடன் கோவிந்தம்பாடி தடுப்பணையை கட்டினால் சுற்றுவட்டார அனைத்து கிராம விவசாயிகளும் இதன் மூலம் பயனடைவார்கள் அப்பணிகளும் விரைவாக முடிக்கப்படும் என சொன்னார்.