போஸ்டர் போட்டு அலுவலர்களை வேலைவாங்கும் சமூக செயற்பாட்டாளர்! கிழிக்காதபடிக்கு பாதுகாப்பு கேட்கிறார்!

போஸ்டர் போட்டு அலுவலர்களை வேலைவாங்கும் சமூக செயற்பாட்டாளர்! கிழிக்காதபடிக்கு பாதுகாப்பு கேட்கிறார்!

ம.பா.கெஜராஜ்,

 பொது மக்களுடைய மனுக்களின் மீது அலுவலர்கள் துரிதமாக நடவடிக்கை எடுத்து கடமையாற்ற வைப்பதில் சமூக செயற்பாட்டாளரான துரைகுணா கைத்தேர்ந்தவர். இதுபற்றி லைவ் லுக் வாசகர்கள் நன்கு அறிவர்.

 இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் உள்ள ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து விற்பனை செய்யும் கும்பலைப்பற்றி புகார் அளித்தும் புகார் அளித்து வருகிறார்.

 ஆனால் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததால் இதற்காக ஒரு போஸ்ட்டர் போராட்டத்தை  அறிவித்து, அதை சமூக விரோதிகள் கிழிக்காமல் இருக்க பாதுகாப்பும் கேட்டுள்ளார். 

 இது பற்றின விவரம் வருமாறு,

புதுக்கோட்டை மாவட்டம் குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த துரைகுணா திருவையாறு போலீஸ் டிஎஸ்பிக்கு இந்த போஸ்ட்டர் போராட்டம் தொடர்பாக அனுமதி கோரி மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

 அதில் அவர் கேட்டுக் கொண்டிருப்பதாவது.   

ஐயா வணக்கம்! நான் மேலே கண்ட முகவரியில் வசிக்கும் செயற்பாட்டாளர் ஆவேன்.தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் பாலையப்பட்டி மேற்கு கிராம ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் இருந்து வரும் குமரமழவரான் ஏரி புல எண்:184 மொத்த பரப்பளவு 21-53-50 எக்டர் ஆகும்.

  ஒரு தனியார் நிறுவனம் மேற்கண்ட ஏரியில் ஒரு மீட்டர் ஆழத்தில் பத்தாயிரம் கன மீட்டர் மட்டும் மண் எடுப்பதற்கு அனுமதி பெற்றுக்கொண்டு மேற்கண்ட ஏரியில் உள்ள உயர்தரம் கொண்ட மணிக்கிராவலை ஒப்பந்த விதிகளை மீறி சட்டவிரோதமாக பல மீட்டர் ஆழத்தில் ஒரு லட்சம் கன மீட்டருக்கு மிகாமல் வெட்டி எடுத்துச் செல்கின்றனர்.

 அதை அவர்கள் அனுமதி பெற்ற நாகப்பட்டினம்- தஞ்சாவூர் ழிபி-83 சாலை அமைப்புக்கு பயன்படுத்தாமல் கள்ள சந்தைகளில் கனிம வளங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

  இது தொடர்பாக 16-09-2024 தேதியிட்ட நாளில் அது துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் பதிவுவஞ்சலில் புகார் அளித்துள்ளேன். அதன் பிறகு 25-09-2024 தேதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்களை நேரில் சந்தித்து இந்த புகார் மனுவை கொடுத்து நினைவூட்டினேன்.

 ஆனால் மேற்கண்ட அதிகாரிகள் எனது புகார் மனுவை இன்று வரை பரிசீலிக்கவில்லை.

   பிறகு 30-09-2024 தேதியில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மீண்டும் வலியுறுத்தினேன். இன்று வரை நடவடிக்கை எடுப்பதற்கான எந்த முகாந்திரமும் நடைபெறவில்லை  

   எனவே இனி பலனளிக்கும் வகையில் நான் சொந்தமாக யோசனை செய்து ஒரு சுவரொட்டி (நோட்டீஸ்) தயார் செய்து உள்ளேன்.இந்த சுவரொட்டியை பொதுமக்கள் படித்து மாவட்ட நிர்வாகம் குறித்த. ஒரு புரிதலும் ஒரு தெரிந்த பார்வையும் வரவேண்டும்என்ற நல்ல நோக்கத்தோடு நான் முழு சுதந்திரமாக செயல்பட்டு தஞ்சாவூர் மாவட்டம் முழுவதிலும் மக்கள் கூடும் இடங்களில் இந்த சுவரொட்டியை ஒட்டி எனது சமூக கடமையை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளேன்.

   எனவே வரும் 09.10.2024 செவ்வாய் கிழமை என்னால் ஒட்டப்படும் சுவரொட்டிக்கு அனுமதி தந்து சமூக விரோதிகள் யாரேனும் மதிப்பு மிக்க சவரொட்டியை கிழித்திடாதபடிக்கு தங்களிடம் சுவரொட்டிக்கு பாதுகாப்பை கோருகிறேன் என அதில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

  போஸ்டர் ஒட்ட அனுமதிக்கப்போவதில்லை. மாறாக துரைகுணாவின் மனு மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா?