நடிகை சமந்தாவை கே.டி.ஆரு.க்கு அட்ஜெஸ்ட் செய்ய சொன்னாரா நாகார்ஜூனா!! கொதிக்கும் திரையுலகம்.... பதுங்கிய அமைச்சர்!

வி.டி.வித்யாசாகர்,

 முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான சமந்தாவை கேடிஆர் என்றழைக்கப்படும் கே.தாரக ராமாராவின் விருப்பத்துக்கு இணங்குமாறு மாமனார் நாகார்ஜூனா கட்டாயப்படுத்தியதாலேயே மகன் நாதசைதன்யாவுடன் விவாகரத்து ஏற்பட்டதாம். இப்படித்தான் காங்கிரஸ் அமைச்சரான கொண்டா சுரேகா பேசி எக்கச்சக்கமாக சிக்கிக்கொண்டார். தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தின் படிகளை தொட்டிருக்கிறது.

 இது பற்றின விவரம் வருமாறு,

  பிரபல தமிழ் நடிகை சமந்தாவும், நடிகர் நாகார்ஜூனா வின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர்.

 குடும்பவாழ்க்கை நல்லமாதிரியாக போய்கொண்டிருக்க மூன்று ஆண்டுக்கு முன்ன இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டுவிட்டது.

   இந்த விவாகரத்துக்கு பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்)கட்சியின் செயல் நிர்வாக தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி சந்திர சேகரராவ்வின் மகனுமான கே.தாரக ராமாராவ்தான் காரணம் என்று தெலுங்கானா மாநில பெண் அமைச்சர் கொண்டா சுரேகா என்பவர் வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார்.

அட்ஜெட்மென்ட்

அதில் நாகார்ஜூனா மூசி ஆற்றங்கரையில் 9 ஏக்கர் பரப்பளவில் என்.கன்வென்ஷென் என்கிற பெயரில் ஒரு ப்ராபரட்டியை வைத்துள்ளார். அந்த இடத்தில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதால் அதை இடிக்க வேன்டும் என்று அப்போதைய கேசிஆர் அரசு முடிவெடுத்தது.

  இதையறிந்த நாகார்ஜூனா உடனே முதலமைச்சர் கேசிஆரின் மகனான கேடிஆரை அனுகிய போது, நாகார்ஜூனாவின் மருமளான சமந்தாவை தமக்கு அட்ஜெட்மென்ட் செய்யுமாறு டிமாண்ட் வைத்தார் கேடிஆர். நாகார்ஜூனாவும் அந்த யோசனையை மருமளான சமந்தாவுக்கு கன்வே செய்துள்ளார்.

  ஆனால் சமந்தா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனாலேயே நாகசைதன்யாவும் சமந்தாவும் விவகாரத்து வரை சென்றனர் என்று அமைச்சர் சுரேகா சொன்னார்.

   பேட்டியில் அவர் கொளுத்தி போட்ட விவகாரம் அங்கு காங்கிரஸை விமர்சனம் செய்யக்கூடிய அளவுக்கு பற்றி எரிய தொடங்கியுள்ளது.

 சமந்தாவின் காட்டமான பதிவு

தெலுங்கானா பெண் மந்திரிக்கு கண்டனம் தெரிவித்து நடிகை சமந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எனது விவாகரத்து என்பது என் சொந்த விஷயம். அது பரஸ் பர அங்கீகாரத்துடன் நடை பெற்றது. விவாகரத்தில் எந்த வித அரசியல் சதியும், குறுக்கீடும் இல்லை. கற்பனைகளை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  அமைச்சர் சுரேகா தயவு செய்து எனது விவாகரத்து பற்றி ஏளனமாக நினைக்க வேண்டாம். அடுத்தவர்களின் சொந்த விஷயங்களைப் பற்றி பேசும் பொழுது பொறுப்பாக இருக்க வேண் டும். தயவுசெய்து என் பெயரை அரசியலுக்கு இழுக்க வேண்டாம். நான் எப்பொழுதும் அரசியலுக்கு அப்பாற்பட்டுதான் இருப்பேன்' என்று தமது எக்ஸ் ன்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

   இந்த பிரச்சனைக்கு காரனமான அமைச்சர் சுரேகாவுக்கு நடிகர்கள் நாகார்ஜூனா, பிரகாஷ்ராஜ், நடிகை ரோஜா ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 பெண் அமைச்சருக்கு எதிராக வழக்கு

 தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தினர் மற்றும் நாக சைதன்யா-சமந்தா விவாகரத்து வழக்கு தொடர்பாகவும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அமைச்சர் கொண்டா சுரேகா மீது நடிகர் நாகராஜுனா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். நம்பப்பள்ளியில் உள்ள சிறப்பு ஜூடிசியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிப் புகார் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

  பிரிவு 222 ஸி/கீ, 223 ஙிழிஷிஷி, 356 ஙிழிஷி ஆகியவற்றின் கீழ் அவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான தங்கள் (அக்கினேனி) குடும்பத்திற்கு எதிராக அமைச்சர் பொய்யான கருத்துக்களால் தங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளனர்.

  முன்னதாக அமைச்சர் கொண்டா சுரேகா தனது கருத்துக்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து, தனது கருத்தை வாபஸ் பெறுவதாக வியாழக்கிழமை வாரங்கலில் அறிவித்தார். "எதிர்பாராத விதமாக, ஒரு குடும்பத்தைப் பற்றிய எனது கருத்தை நான் திரும்பப் பெறுகிறேன்.

 கே.டி.ஆர் என்னை அவமதிக்கும் வகையில் பேசினார். அந்த வார்த்தைகளால் நான் புண்பட்டு, அவரைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது தற்செயலாக அந்தக் குடும்பத்தைப் பற்றி பேசினேன். அந்தக் கருத்துக்களை நான் திரும்பப் பெறுகிறேன்.என்று அமைச்சர் சுரேகா தெளிவுபடுத்தினார்.

  மறுபுறம், அமைச்சர் கொண்டா சுரேகாவின் குற்றச்சாட்டுகளால் திரையுலகில் கோபம் ஏற்பட்டுள்ளது. "அமைச்சரின் கருத்து என்னை மிகவும் புண்படுத்துகிறது.அவரது கருத்து அவமானகரமானது.அரசியல் பிழைப்புக்காக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது நல்லதல்ல.

   அரசு ஆதாயத்துக்காக இப்படி கீழ்த்தரமாக இறங்கக்கூடாது. இழப்பது ஏற்புடையதல்ல. இதில் அரசியலில் ஈடுபடாத பெண்களை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று சிரஞ்சீவி தெரிவித்தார்.

   உயர் பதவியில் இருப்பவர்கள் எங்களுடன் இருக்க வேண்டும் என நடிகர் வெங்கடேஷிம், தனிப்பட்ட விஷயங்களை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவது வருத்தமளிக்கிறது, அமைச்சரின் நடத்தை மிகவும் அவமரியாதையாகவும், தெலுங்கு கலாச்சாரத்துக்கு எதிராகவும் உள்ளது என அல்லு அர்ஜுன் ட்வீட் செய்துள்ளார்.

  பெண் அமைச்சராக இருக்கும் சுரேகா கூறிய கருத்து ஏற்கத்தக்கது அல்ல என்று மகேஷ் பாபு கூறினார். இதுபோன்ற செயல்களை திரையுலகமும், சமூகமும் பொறுத்துக் கொள்ளாது என நடிகர் என்டிஆர் எச்சரித்துள்ளார். திரையுலகத்தை காயப்படுத்த நினைத்தவர்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (எம்ஏ) தலைவர் மஞ்சு விஷ்ணு தெரிவித்துள்ளார்.

  அரசுப் பிரதிநிதிகளின் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இண்டஸ்ட்ரி சகித்துக் கொள்ளாது என இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

  "பொறுப்பான பதவியில் இருப்பவர் ஊடகங்கள் முன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்புடையதல்ல.

அரசியல்வாதிகள் என்ன சொன்னாலும் தப்பித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். இது விரும்பத்தகாதது. அத்தகைய பொருட்களை அனைவரும் எடுத்துச் செல்ல வேண்டும். நடிகர் நானி ட்வீட் செய்துள்ளார்.

 விஜய் தேவரகொண்டா, "சுயநலத்திற்காக இதுபோன்ற கருத்துகளால் இந்த யாளை தரம் தாழ்த்தாதீர்கள் என்று கொதித்திருக்கிறார்கள்.

 ஆக அட்ஜஸ்ட்மென்ட்டை மையப்படுத்தி தெலுங்கானாவில் பிரச்சனையை கிளப்பிவிட்டிருக்கிறார் காங்கிரஸ் பெண் அமைச்சர்.